ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் 560 ரூபாய் அதிகரித்து, புதிய உச்சம் பெற்றிருக்கிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த சில தினங்களாக, ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இன்று சவரனுக்கு மேலும் 560 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும், சவரனுக்கு 4 ஆயிரம் ரூபாய் உயர்ந்திருக்கிறது. இந்த விலை உயர்வு, நகை வாங்கும் எண்ணத்தில் இருந்த வாடிக்கையாளர்களுக்கு, கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையில் ஒரு கிராம் தங்கம், 12 ஆயிரத்து 890 ரூபாயாகவும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 120 ரூபாயாகவும் உள்ளது. இதேபோல், வெள்ளி கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் 254 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 2 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

















