December 4, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நீதிமன்ற உத்தரவை மீறி பெருமாள் கோயில்பட்டியில் தீபம் ஏற்ற 144 தடை

by sowmiarajan
December 4, 2025
in News
A A
0
நீதிமன்ற உத்தரவை மீறி பெருமாள் கோயில்பட்டியில் தீபம் ஏற்ற 144 தடை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திண்டுக்கல் மாவட்டம் பெருமாள் கோவில்பட்டி கிராமத்தில் உள்ள மண்டு கருப்பணசுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தும், சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதற்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சிறுபான்மையினரின் வாக்கு வங்கிக்காக இந்துக்களின் உரிமையை ‘திராவிட மாடல்’ தி.மு.க. அரசு பறிக்கிறது என்றும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

திண்டுக்கல் மாவட்டம் பெருமாள் கோயில்பட்டி கிராமத்தில் இந்துக்கள் சிறுபான்மையாகவும், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாகவும் உள்ளனர். இங்குள்ள மண்டு கருப்பண்ண சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை தினத்தில் தீபம் ஏற்றுவதற்கு இந்துக்கள் சார்பில் முயற்சி நடைபெறுவது வழக்கம். ஆனால், அங்குள்ள கிறிஸ்தவர்களின் எதிர்ப்பைக் காரணம் காட்டி இதுவரை போலீசார் அனுமதி மறுத்து வந்துள்ளனர். இந்தச் சூழலில், இந்துக்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தீபம் ஏற்ற அனுமதி கோரி வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கோயில் இடத்தில் தீபம் ஏற்றுவதால் யாருக்கும் எந்த இடையூறும் இல்லை எனத் தெரிவித்து, தீபம் ஏற்ற அனுமதி வழங்கித் தீர்ப்பு வழங்கினார்.

ஆனால், இந்தச் சாதகமான தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல், சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறி மாவட்ட நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்தத் தவறியது குறித்து இந்து அமைப்புகள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆவேசமாகக் கண்டனம் தெரிவித்த இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், “இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் அனுதினமும் தங்களது வழிபாட்டு உரிமைகளைப் பாதுகாக்கப் போராடுவதும், நீதிமன்றம் சென்று நீதி பெறுவதும், பிறகு அந்த நீதி மறுக்கப்படுவதும் உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நடைபெறாத கொடுமை. இந்த கொடுமைகளைத் தமிழகத்தில் இந்துக்கள் ஒவ்வொரு நாளும் அனுபவித்து வருகிறார்கள். பெருமாள் கோயில்பட்டியில் இந்துக்கள் சிறுபான்மையானால், நீதிமன்ற அனுமதி இருந்தாலும்கூடத் தீபம் ஏற்றும் நிகழ்வை நடத்த முடியாது என்பது இதன் மூலம் கண்கூடாகத் தெரிகிறது,” என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில், “சிறுபான்மை மக்களின் ஓட்டுக்காக பெரும்பான்மை இந்து மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் நசுக்கும் திராவிட மாடல் தி.மு.க., அரசை, இனி வரும் காலங்களில் ஓட்டு என்ற ஆயுதம் கொண்டு ஓட ஓட விரட்ட வேண்டும்” என்று ஆவேசமாகக் கண்டனம் தெரிவித்தார். நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த 144 தடை உத்தரவு, அரசியல் ரீதியாகவும், சட்டம்-ஒழுங்கு ரீதியாகவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: court order violationlamp lighting bansection 144temple regulations
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திண்டுக்கல்லில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 280 பேருக்கு ரூ.93.67 லட்சம் நலத்திட்ட உதவி

Next Post

தென்காசி அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசுவாமி படுகொலை

Related Posts

பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு
News

பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

December 4, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
News

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025
“இது தமிழ்நாடா… இல்லை கொலைநாடா?” – தென்காசி கொலை குறித்து இ.பி.எஸ். கடும் கண்டனம்.
News

“இது தமிழ்நாடா… இல்லை கொலைநாடா?” – தென்காசி கொலை குறித்து இ.பி.எஸ். கடும் கண்டனம்.

December 4, 2025
விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி மகளுக்கு தற்காலிகப் பணி வழங்கியது சர்ச்சை
News

விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி மகளுக்கு தற்காலிகப் பணி வழங்கியது சர்ச்சை

December 4, 2025
Next Post
தென்காசி அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசுவாமி படுகொலை

தென்காசி அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசுவாமி படுகொலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

December 4, 2025
பொதுமக்களுடன் கைகோர்த்த தவெக தொண்டர்கள் – நடுரோட்டில் ஆர்ப்பாட்டம்

பொதுமக்களுடன் கைகோர்த்த தவெக தொண்டர்கள் – நடுரோட்டில் ஆர்ப்பாட்டம்

December 3, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025
கடைசிவரை பணிவு… ஏவிஎம் சரவணன் மறைவு !

கடைசிவரை பணிவு… ஏவிஎம் சரவணன் மறைவு !

December 4, 2025
பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

0
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

0
“இது தமிழ்நாடா… இல்லை கொலைநாடா?” – தென்காசி கொலை குறித்து இ.பி.எஸ். கடும் கண்டனம்.

“இது தமிழ்நாடா… இல்லை கொலைநாடா?” – தென்காசி கொலை குறித்து இ.பி.எஸ். கடும் கண்டனம்.

0
விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி மகளுக்கு தற்காலிகப் பணி வழங்கியது சர்ச்சை

விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி மகளுக்கு தற்காலிகப் பணி வழங்கியது சர்ச்சை

0
பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

December 4, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025
“இது தமிழ்நாடா… இல்லை கொலைநாடா?” – தென்காசி கொலை குறித்து இ.பி.எஸ். கடும் கண்டனம்.

“இது தமிழ்நாடா… இல்லை கொலைநாடா?” – தென்காசி கொலை குறித்து இ.பி.எஸ். கடும் கண்டனம்.

December 4, 2025
விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி மகளுக்கு தற்காலிகப் பணி வழங்கியது சர்ச்சை

விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி மகளுக்கு தற்காலிகப் பணி வழங்கியது சர்ச்சை

December 4, 2025

Recent News

பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

December 4, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025
“இது தமிழ்நாடா… இல்லை கொலைநாடா?” – தென்காசி கொலை குறித்து இ.பி.எஸ். கடும் கண்டனம்.

“இது தமிழ்நாடா… இல்லை கொலைநாடா?” – தென்காசி கொலை குறித்து இ.பி.எஸ். கடும் கண்டனம்.

December 4, 2025
விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி மகளுக்கு தற்காலிகப் பணி வழங்கியது சர்ச்சை

விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி மகளுக்கு தற்காலிகப் பணி வழங்கியது சர்ச்சை

December 4, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.