மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தேசிய சர்க்கரை இணையம் உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் மாநில குழுவினர் ஆலையை புனரமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட நிலையில் தமிழக அரசு மீது நம்பிக்கையில்லை. ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் புணரமைப்பு பணிகளை துவங்கினால் மட்டுமே கரும்பு பயிரிடுவோம் விவசாயிகள் காட்டம்:-
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே தலைஞாயிறு கிராமத்தில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் 1987ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 700 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருந்தனர். மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த 23 ஆயிரம் விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த ஆலையானது, ஒரு டன்னுக்கு 97 கிலோ உற்பத்தி அரவை தந்தது. 1993 ஆம் ஆண்டில் 25 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. அதன் காரணமாக இந்திய அளவில் சிறந்த ஆலை என்று விருதுகளும் வழங்கப்பட்டது. இந்நிலையில் 1994ஆம் ஆண்டு ரூபாய் 33 கோடியில் கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியார் நிறுவனத்தால் விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கம் பணிகளை முறையாக செய்யவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டிய நிலையில் ஒரு டன்னுக்கு 59 கிலோ மட்டுமே சர்க்கரை அரவை தந்து நஷ்டம் ஏற்பட்டது. நஷ்டத்தை சந்தித்து வந்த ஆலையை மறுசீரமைப்பு செய்ய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் 2015ஆம் ஆண்டில் 56 கோடி ரூபாய் நிதியை ஆலை புணரமைப்பு பணிக்கு ஒதுக்கீடு செய்தார். ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஆலையை புணரமைப்பதற்கான நிதியை தமிழக அரசு இதுநாள் வரை வழங்கவில்லை. தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் 2017ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டது. இதனையடுத்து ஆலையை புனரமைக்ககோரியும், ஆலையை இயக்ககோரியும் கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றபின் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய 2022-2023ல் மதிப்பிட்டு குழு அமைத்து ஆய்வு செய்தது. ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் இன்று தலைஞாயிறு என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் டெல்லி தேசிய சர்க்கரை இணையம் உயர்மட்ட வல்லுநர் குழுவினர் மற்றும் மாநில குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். டெல்லி கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிற்சாலைகளின் தேசிய கூட்டமைப்பு தொழில்நுட்ப ஆலோசகர் கே.முரளிதர் சௌத்ரி, கரும்பு ஆராய்ச்சி ஆய்வாளர் டாக்டர் ஆர்.பி.டூல், பொறியாளர் வினெய், சோமசுந்தரம், விக்ரம் பிரதாப்சிங் மற்றும் மாநிலக் குழுவினர் எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் செந்தில்அரசன், தஞ்சாவூர் அறிஞர் அண்ணா கூட்டுறவு நிர்வாக இயக்குனர் ராமன், கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் பிரியா, சென்னை தலைமை கரும்பு அபிவிருத்தி அலுவலர் வெற்றிவேலன், தலைமை கரும்பு பொறியாளர் சக்திவேல், தலைமை இரசாயனர் செந்தில்குமார், கரும்பு அபிவிருத்தி அலுவலர் ரவிக்கிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். முன்னதாக கரும்பு விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஆலையை ஆய்வு செய்து சீரமைத்து இயக்குவற்கான சாத்திய கூறுகள் குறித்து தமிழக அரசிடம் அறிக்கை அளிக்கப்படும் என்றனர். மேலும் விவசாயிகள் கரும்பு பயிரிடுவதற்கு முன் வருமாறு ஆய்வு குழுவினர் கேட்டுக் கொண்டபோது தமிழக அரசு மீது நம்பிக்கையில்லை ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆலையை மீண்டும் இயக்குவதற்குரிய புணரமைப்பு பணிகள் தொடங்கினால் மட்டுமே கரும்பு பயிரிட முடியும் என விவசாயிகள் அனைவரும் உறுதியாக தெரிவித்தனர். ஆய்வின்போது டெல்டா பாசன விவசாயகள் சங்க தலைவர் அன்பழகன், கரும்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த செயலாளர்கள் முருகன், காசிநாதன், நடராஜன் மற்றும் திரளான கரும்பு விவசாயிகள் உடனிருந்தனர்














