November 13, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ராஜபாளையம் கோவில் இரட்டை கொலை : “தமிழகத்தில் ஆட்சி என ஒன்று இருக்கிறதா ?”

by Priscilla
November 11, 2025
in News
A A
0
ராஜபாளையம் கோவில் இரட்டை கொலை : “தமிழகத்தில் ஆட்சி என ஒன்று இருக்கிறதா ?”
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோவிலில் இரவுக் காவலர்கள் இருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரவு பாதுகாப்புப் பணியில் இருந்த பேச்சிமுத்து, சங்கர பாண்டியன் ஆகிய இரு காவலர்களும் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் கோயிலின் கொடிமரத்திற்கு அருகே கிடந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தளப் பதிவில் அவர் கூறியதாவது:

“கோவில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பட்டாக்கத்தி, அரிவாள், துப்பாக்கி, வெடிகுண்டு என சட்டம்-ஒழுங்கு தகர்ந்து போனது. தமிழகத்தில் ஆட்சி என ஒன்று இருக்கிறதா? பொம்மை முதல்வர் தலைமையிலான இந்த தோல்வி மாடல் அரசுக்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.”

அதேபோல், சென்னை மாநகராட்சி பெண் கவுன்சிலர் அலுவலகத்தில் நடந்த வெடிகுண்டு வீச்சு சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மக்களின் உயிரை ஆபத்துக்குள்ளாக்கி விளையாடும் இந்த ஆட்சி சட்டம்-ஒழுங்கை முழுமையாக சீரழித்துவிட்டது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும்,” என்று இபிஎஸ் வலியுறுத்தினார்.

இதேநேரத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமது அறிக்கையில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

“கோயில்களில் கூட இனி பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் இரவுக் காவலர்கள் கொலை செய்யப்பட்டதோடு, கோயிலின் உண்டியலிலிருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது கோயில்களை கூட கொலைக்களமாக மாற்றிய திமுக ஆட்சியின் தோல்வி.”

மேலும் அவர் தெரிவித்தார்:

“திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு எந்த தண்டனையும் கிடையாது என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. திருச்சியில் காவலர் குடியிருப்புக்குள் நடந்த கொலைக்கும், இக்கோவில் கொலைக்கும் காரணம் அதே சட்டம்-ஒழுங்கின் சரிவு தான். திறமையான அதிகாரிகளை அரசியல் காரணங்களால் பயன்படுத்தாததால் காவல்துறையின் மதிப்பு குறைந்துவிட்டது.”

“கொலை, கொள்ளைகளை தடுக்கத் தவறிய திமுக அரசு, மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. வரும் தேர்தலில் இதற்கான பதிலை மக்கள் தருவார்கள்,” என்று அன்புமணி தெரிவித்தார்.

ராஜபாளையம் கோவில் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: admkANBUMANIDOUBLE MURDERedapadi palanisamymk stalinmurderPMKRajapalayamRajapalayam templeTN CHIEF MINISTER
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

300 ஆண்டு பழமையான கோவிலில் இரு காவலர்கள் வெட்டிக் கொலை!

Next Post

“மோடி, அமித்ஷா, அம்பானி கூட்டணி பொறுப்பேற்க வேண்டும் !”- திருமாவளவன் கடும் விமர்சனம்

Related Posts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 13 November 2025 | Retro tamil
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 13 November 2025 | Retro tamil

November 13, 2025
கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: 379 மனுக்கள் ஏற்பு.
News

கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: 379 மனுக்கள் ஏற்பு.

November 12, 2025
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: சேலம் ஆட்சியர் ஆய்வு!
News

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: சேலம் ஆட்சியர் ஆய்வு!

November 12, 2025
நாமக்கல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்  நலத்திட்ட உதவி
News

நாமக்கல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்  நலத்திட்ட உதவி

November 12, 2025
Next Post
“மோடி, அமித்ஷா, அம்பானி கூட்டணி பொறுப்பேற்க வேண்டும் !”- திருமாவளவன் கடும் விமர்சனம்

“மோடி, அமித்ஷா, அம்பானி கூட்டணி பொறுப்பேற்க வேண்டும் !”- திருமாவளவன் கடும் விமர்சனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“அறிவுத் திருவிழா அல்ல, அவதூறுத் திருவிழா” – விஜய் கண்டனம் !

“அறிவுத் திருவிழா அல்ல, அவதூறுத் திருவிழா” – விஜய் கண்டனம் !

November 12, 2025
வீடு தேடி வரும் ரூ.5000.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ?

வீடு தேடி வரும் ரூ.5000.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ?

November 12, 2025
பேண்டு வாத்தியம் முழங்க மாபெரும் கையெழுத்து பிரச்சாரம்

பேண்டு வாத்தியம் முழங்க மாபெரும் கையெழுத்து பிரச்சாரம்

November 12, 2025
விசில் சின்னம் கோரி விஜயின் தவெக மனு  தேர்தல் கமிஷனில் பரபரப்பு !

விசில் சின்னம் கோரி விஜயின் தவெக மனு தேர்தல் கமிஷனில் பரபரப்பு !

November 12, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 13 November 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 13 November 2025 | Retro tamil

0
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: சேலம் ஆட்சியர் ஆய்வு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: சேலம் ஆட்சியர் ஆய்வு!

0
கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: 379 மனுக்கள் ஏற்பு.

கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: 379 மனுக்கள் ஏற்பு.

0
நாமக்கல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்  நலத்திட்ட உதவி

நாமக்கல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்  நலத்திட்ட உதவி

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 13 November 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 13 November 2025 | Retro tamil

November 13, 2025
இன்றைய ராசிபலன் – நவம்பர் 12, 2025  (புதன்கிழமை)

இன்றைய ராசிபலன் – நவம்பர் 13, 2025 (வியாழக்கிழமை)

November 13, 2025
கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: 379 மனுக்கள் ஏற்பு.

கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: 379 மனுக்கள் ஏற்பு.

November 12, 2025
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: சேலம் ஆட்சியர் ஆய்வு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: சேலம் ஆட்சியர் ஆய்வு!

November 12, 2025

Recent News

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 13 November 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 13 November 2025 | Retro tamil

November 13, 2025
இன்றைய ராசிபலன் – நவம்பர் 12, 2025  (புதன்கிழமை)

இன்றைய ராசிபலன் – நவம்பர் 13, 2025 (வியாழக்கிழமை)

November 13, 2025
கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: 379 மனுக்கள் ஏற்பு.

கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: 379 மனுக்கள் ஏற்பு.

November 12, 2025
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: சேலம் ஆட்சியர் ஆய்வு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: சேலம் ஆட்சியர் ஆய்வு!

November 12, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.