ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், ஆசிரியை ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு ஆசிரியை மற்றும் 2 மாணவிகள் பலத்த காயம் அடைந்தனர்.
அரக்கோணம் அருகே உள்ள மிட்டாப்பேட்டை கிராமத்தில் செயல்படும் அரசுப்பள்ளியின் ஆசிரியை சாந்தி, தலைமை ஆசிரியை செந்தாமரை மற்றும் மாணவிகள், நேற்று மாலை பள்ளி முடிந்ததும், வீட்டிற்கு நடந்து சென்றனர்.
அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டர் அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஆசிரியை சாந்தி, சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார். தலைமை ஆசிரியை செந்தாமரை மற்றும் 2 மாணவிகள் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக அரக்கோணம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.