திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக பெய்த கனமழை காரணமாக குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்து வருகிறது இதனால் விவசாயிகள் மிகுந்த பொருளாதார இழப்புக்கு ஆளாகி வருகின்றனர் . திருவாரூர் மாவட்டத்தில் குறிப்பாக 1.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்திருந்தனர் திருவாரூர் மாவட்டம் முழுவதும் குறுவை அறுவடை பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர் இந்த நிலையில் தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்களாக பெய்த கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள அரசூர் ராமபுரம், சவளக்காரன் . தரிசு வெளி , மூன்றாம் சேத்தி, கருவ குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர் . வேளாண் துறை அதிகாரிகள் உடனடியாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள். உரிய கணக்கெடுக்க வேண்டும் , குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகள் கொண்டு வரும் நெல்மூட்டைகளை ஈரப்பதம் பார்க்காமல் அதிகாரிகள் கொள்முதல் செய்ய வேண்டும், வரும் ஆண்டில் ஆறு வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்
