விழுப்புரம் தெற்கு நகர அதிமுக சார்பில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுக்கான பயிற்சி கூட்டம் மகாராஜபுரம் பகுதியில் உள்ள் தனியர்
திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. நகர செயலாளர் பசுபதி தலைமை யில் நடைப்பெற்ற முகாமில் முன்னாள்.சட்டத்துறை அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் அவர்கள்.கலந்துக்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில் :
அடிமட்ட தொண்டர்கள்
யாராக இரருந்தாலும் உழைத்தால் எத்தகைய உயரத்திற்கு வர முடியும் இது தான் அதிமுக எனவும், அதற்கு எடுத்துக்காட்டு அதிமுக பொது செயலாளர் எடப்பாடியார் எனவும், அதிமுக கிளை கழக செயலாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் நம்பி தான் உள்ளது, வாக்காளர் பட்டியலை முழுமையாக பொறுப்பாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்
வாக்காளர்கள் பட்டியலில் திமுக குளறுபடி செய்கிறது, இறப்பு மற்றும் முகவரியில் இல்லாதவர்களை நீக்க பல முறை வலியுறுத்தியும் இதுவரை நீக்க வில்லை, தேர்தல் ஆணையத்திலும் கோரப்பட்டுள்ளது, தேர்தல் ஆணையம் சரிசெய்யவில்லை என்றால் அதிமுக சார்பில் நீதிமன்றத்திற்கு செல்வோம் என எச்சரித்த சி.வி.சண்முகம்
இன்னும் ஆறு மாதம் இந்த ஆட்சியின் ஆயுள் காலம் என்றும், உங்களை நம்பி தான் மிக பெரிய பணியை அதிமுக ஒப்படைத்துள்ளதாகவும், இந்த திமுக விடம் இருந்து இந்த நாடு காப்பாற்ற வேண்டும், ஸ்டாலினின் ஒரே ஒரு குடும்பம் தான் வாழ்வதாகவும், தேர்தலுக்காக தற்போது அனைத்தையும் செய்து தருவதாக கூறுவார்கள்,
நான்கரை ஆண்டுகாலம் எங்கு சென்றார்கள் என கேள்வி எழுப்பிய அவர், இந்த ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும், மீண்டும் எம்.ஜி.ஆர், அம்மா ஆட்சி எடப்பாடியார் தலைமையில் அமைய அனைவரும் நம்பிக்கையோடு பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.இக்கூட்டத்தில் வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளரும், மாவட்ட பொறுப்பாளருமான பாலமுருகன், கடலூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் நந்த கோபால், மண்டல இணை செயலாளர் ஜெகதீஸ்வரி, மாவட்ட மகளிரணி செயலாளர் தமிழ்செல்வி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
