வேதாரண்யம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த செருதூர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரண பொருட்களை பறிக்கொடுத்தோடு காயமடைந்த நிலையில் கரை திரும்பிய 12 மீனவர்களில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூர் மீனவ கிராமத்திலிருந்து 50 க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீது கடந்த 11ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர்.
இதில், முருகையன்,செல்வகுமார், வெண்ணிலா ஆகிய மூவருக்கு சொந்தமான பைபர் படகில் தனிதனியே மீன் பிடிக்க சென்ற 12 மீனவர்கள் வேதாரண்யத்தில் இருந்து தென்கிழக்கு சுமார் 15 கடல் மைல் நாட்டிக்கல் தூரத்தில் நிலையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த தமிழ் பேசும் இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி, மீனவர்களிடமிருந்து மொபைல் போன்கள், வெள்ளி ஆபரணங்கள், ஜிபிஎஸ், எஞ்சின், மீன்பிடி வலைகள், மீன்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரண பொருட்களை பறித்துச் சென்றுள்ளனர்.
இந்த தாக்குதலில் மூன்று படகில் இருந்த 12 மீனவர்களில் தமிழழகன் கையில் மூட்டு இறங்கி நிலையிலும், பாலகிரு~;ணன், இடும்பன், கணேசன் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் கரை திருப்பி 12 மீனவர்களில் 7 பேர் ஆம்புலன்ஸ் மூலம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெறும் இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதலால் செருதூர் மீனவர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இனிவரும் காலங்களில் இந்த சம்பவம் நடக்காமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
