மயிலாடுதுறை அருகே விவகாரத்து பெற்ற மனைவியை தாக்கிய கணவனை கைது செய்து மணல்மேடு போலீசார் சிறையில் அடைக்க இருந்த நிலையில் கைதி தப்பி ஓட்டம்:-
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள சி.புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன்.32. மனைவி கார்த்திகா தம்பதியினர். திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். கணவன் மனைவி இடையே குடும்பத்தகராறு கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு விவகாரத்து பெற்றுள்ளனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு பிரபாகரன் ராதா நல்லூரில் வசிக்கும் கார்த்திகாவிடம் தகராறு செய்து தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த கார்த்திகா மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் மணல்மேடு காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் உத்தரவில் காவல் உதவி ஆய்வாளர் திருமுருகன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து நேற்று மாலை பிரபாகரனை கைது செய்தனர். நீதிமன்றத்தில் பிரபாகரனை ஆஜர் படுத்த இருந்த நிலையில் காவல் நிலையத்தில் உட்கார வைக்கப்பட்டிருந்த பிரபாகரன் போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிரபாகரனை தேடி வருகின்றனர். மணல்மேடு காவல் நிலையத்தில் கைதி தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


















