மயிலாடுதுறையில் மாயவரம் ராதா கல்யாண ட்ரஸ்ட் சார்பில் 71-வது ஆண்டு ஸ்ரீராதாகல்யான மகோற்சவம் கோலாகலமாக நடைபெற்றது:- 2000-க்கு மேற்பட்டோர் பங்கேற்று வழிபாடு:-
மயிலாடுதுறையில் மாயவரம் ராதாகல்யாண ட்ரஸ்ட் சார்பில் 71-வது ஆண்டு ஸ்ரீராதாகல்யான மகோற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்றது. இதில் உடையாளூர் திருவண்ணாமலை தஞ்சாவூர் சென்னை கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாகவதர்கள் மற்றும் ஹார்மோனிய, மிருதங்க இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டனர். கடந்த வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய விழாவில் பாகவதர்களின் பஜனை, நாம சங்கீர்த்தனம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், திவ்ய நாம பஜனை, அஷ்டபதி பஜனை ஆகியன நடைபெற்றது. சிகர விழாவான இன்று பெண்கள் சீர் எடுத்து வந்து கும்மி அடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து திருமணச் சடங்குகள் செய்யப்பட்டு மாங்கல்ய தாரணம் வெகு கோலாகலமாக நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாகவதர்கள் இசைக்கலைஞர்கள் மற்றும் பக்தர்கள் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

















