இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், தனது பிரபல ஹேட்ச்பேக் மாடலான அல்ட்ரோஸை 2025 ஃபேஸ்லிஃப்ட் வடிவத்தில் மேம்படுத்தியுள்ளது. 2020-ம் ஆண்டுக்குப் பிறகு இது அல்ட்ரோஸில் மேற்கொள்ளப்படும் மிக முக்கியமான மேம்பாடு ஆகும்.
புதிய அல்ட்ரோஸ் மாடல், மே 22ஆம் தேதி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படுகிறது. அதன் அறிமுகத்திற்கு முன்பாகவே, டாடா நிறுவனம் காரின் முக்கிய அம்சங்களை வெளியிட்டுள்ளது.
வெளித்தோற்றத்தில் செய்யப்பட்ட முக்கிய மாற்றங்கள்:
- காரின் முன்பக்கத்தில் 3D கிரில் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புகள் இடம்பெற்றுள்ளன.
- புதிய லுமினேட் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் இன்ஃபினிட்டி கனெக்டெட் டெயில் லைட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
- ஃபிளஷ் டோர் ஹேண்டல்கள், புதிய பம்பர் வடிவமைப்பு, மற்றும் 16 இஞ்ச் 5 ஸ்போக் அலாய் வீல்கள் காரின் ஸ்டைலை மேலும் உயர்த்துகின்றன.
காரின் உள்ளே:
- புதிய டு-ஸ்போக் ஸ்டீரிங் வீல்
- டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
- மறுவடிவமைக்கப்பட்ட டேஷ்போர்டு, மேலும் வசதியான கேபின் அமைப்பை வழங்குகிறது.
பாதுகாப்பும் தொழில்நுட்ப வசதிகளும்:
புதிய அல்ட்ரோஸ் காரின் அனைத்து வேரியண்ட்களும் 6 ஏர்பேக் பாதுகாப்பு அம்சத்துடன் வருகிறது. கூடுதலாக,
- 17.78 செ.மீ டச் ஸ்கிரீன்,
- 360 டிகிரி கேமரா,
- வயர்லெஸ் சார்ஜிங் வசதி,
- குரல் கட்டுப்பாடுடன் கூடிய மின்சார சன்ரூஃப் உள்ளிட்ட பல முன்னேற்றமான அம்சங்களும் உள்ளன.
என்ஜின் :
புதிய அல்ட்ரோஸில்,
- 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின்,
- 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆகிய இரண்டு விருப்பங்களும் வழங்கப்படுகின்றன.
விலை விவரம்:
இந்த புதிய காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.7.50 லட்சம் முதல் ரூ.11.50 லட்சம் வரை இருக்கக்கூடும். மேலும், ரேசர் அல்லது டார்க் எடிஷன் போன்ற சிறப்புப் பதிப்புகளுக்கேற்ப விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.