September 1, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மரக்கன்றுகள் – வனத்துறை அழைப்பு

by Satheesa
September 1, 2026
in News
A A
0
விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மரக்கன்றுகள் – வனத்துறை அழைப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மரக்கன்றுகள் – வனத்துறை அழைப்பு.

விழுப்புரம்: –

தமிழ்நாடு பசுமை இயக்கம் மற்றும் வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருவதாக வனத்துறை தெரிவித்துள்ளது. வனத்துறை சார்பில் தேக்கு, செம்மரம், சந்தனம், மகாகனி, வேங்கை, இருவடி, பலா உள்ளிட்ட விலை மதிப்புமிக்க மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. வீடுகளுக்கு தேவையான வாசற்படி, ஜன்னல் மற்றும் மரச்சாமான்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் இம்மரங்களுக்கு எதிர்காலத்தில் அதிக தேவை இருப்பதால், விவசாயிகளுக்கு நீண்டகால வருமானம் கிடைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.மேலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புங்கன், நாவல், புளி, இலுப்பை, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகளும் ஏரிகள், பொது இடங்கள், கல்லூரி வளாகங்கள் மற்றும் சமுதாய இடங்களில் நடவு செய்யப்பட்டு வருகின்றன. மரக்கன்றுகளை வழங்குவதோடு மட்டுமின்றி, அவற்றை நடவு செய்வதற்கும், பராமரிப்பதற்கும் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வனத்துறை அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். குறிப்பாக, தரிசாக உள்ள விவசாய நிலங்களில் மண்ணுக்கேற்ற மரங்களைத் தேர்வு செய்து, நடவு முதல் வளர்ப்பு வரை தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன. விழுப்புரம் வனச்சரக அலுவலர் குப்புசாமி மற்றும் விழுப்புரம்-2 வனச்சரக அலுவலர் பாரத் ஆகியோரது சரகங்களில் தலா 1.50 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.விக்கிரவாண்டி அருகே மேலகொந்தை மற்றும் செஞ்சி அருகே தீவனூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நர்சரிகளில் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வனத்துறை அலுவலகங்களை அணுகி மரக்கன்றுகளை இலவசமாக பெற்றுக்கொண்டு நடவு செய்து பயன்பெறலாம் என வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தரிசு நிலங்களை பசுமையாக்கி, எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை உருவாக்குவதுடன், சுற்றுச்சூழலை பாதுகாப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என வனத்துறை தெரிவித்துள்ளது.

வனத்துறை அதிகாரி பேட்டி உள்ளது.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

 வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றம்

Next Post

கொள்ளிடம் கரையோர கிராம மக்களை வஞ்சிப்பதாகக் கூறி தமிழக அரசைக் கண்டித்து, PMKகண்டன ஆர்ப்பாட்டம்

Related Posts

நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி
News

நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

September 1, 2026
திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்
News

திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

September 1, 2026
நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா. என மாற்றுத்திறனாளி பெண் தரையில் அமர்ந்து அழுது புலம்பல்
News

நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா. என மாற்றுத்திறனாளி பெண் தரையில் அமர்ந்து அழுது புலம்பல்

September 1, 2026
சித்தர்கா அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அகத்திய விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்
News

சித்தர்கா அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அகத்திய விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

September 1, 2026
Next Post
கொள்ளிடம் கரையோர கிராம மக்களை வஞ்சிப்பதாகக் கூறி தமிழக அரசைக் கண்டித்து, PMKகண்டன ஆர்ப்பாட்டம்

கொள்ளிடம் கரையோர கிராம மக்களை வஞ்சிப்பதாகக் கூறி தமிழக அரசைக் கண்டித்து, PMKகண்டன ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
தாயுமானவர் திட்டத்தில் திருச்சிக்கு ரூ. 37.75 கோடி நலத்திட்ட உதவி  கே.என். நேரு வழங்கினார்

தாயுமானவர் திட்டத்தில் திருச்சிக்கு ரூ. 37.75 கோடி நலத்திட்ட உதவி  கே.என். நேரு வழங்கினார்

December 7, 2025
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பகிர்..மிருகமாக மாறிய பெண் ஊழியர்

குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பகிர்..மிருகமாக மாறிய பெண் ஊழியர்

August 12, 2025
நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

September 1, 2026
திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

September 1, 2026
நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

0
திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

0
நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா. என மாற்றுத்திறனாளி பெண் தரையில் அமர்ந்து அழுது புலம்பல்

நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா. என மாற்றுத்திறனாளி பெண் தரையில் அமர்ந்து அழுது புலம்பல்

0
சித்தர்கா அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அகத்திய விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

சித்தர்கா அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அகத்திய விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

0
நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

September 1, 2026
திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

September 1, 2026
நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா. என மாற்றுத்திறனாளி பெண் தரையில் அமர்ந்து அழுது புலம்பல்

நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா. என மாற்றுத்திறனாளி பெண் தரையில் அமர்ந்து அழுது புலம்பல்

September 1, 2026
சித்தர்கா அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அகத்திய விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

சித்தர்கா அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அகத்திய விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

September 1, 2026

Recent News

நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

September 1, 2026
திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

September 1, 2026
நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா. என மாற்றுத்திறனாளி பெண் தரையில் அமர்ந்து அழுது புலம்பல்

நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா. என மாற்றுத்திறனாளி பெண் தரையில் அமர்ந்து அழுது புலம்பல்

September 1, 2026
சித்தர்கா அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அகத்திய விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

சித்தர்கா அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அகத்திய விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

September 1, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.