கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் போர் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒத்திகை கமாண்டோ வீரர்கள் பங்கேற்று.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இரு நாடுகளும் தங்கள் ராணுவ பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன. இதனால், எல்லை பகுதிகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை துறைமுகத்தில் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணு மின் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு குறித்து ஒத்திகை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் அணுமின் நிலையத்திற்குள் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது வருகிறது
மேலும் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கமாண்டோ பாதுகாப்பு வீரர்கள் பங்கேற்று பாதுகாப்பு சம்பந்தமாக ஒத்திகை நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தார் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்
இந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதால் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பரபரப்பாக காணப்படுகிறது.