நாகர்கோவில் அருகே வயிறு வலியால் அவதிபட்டு வந்த பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்து 6 கிலோ கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்தவர் கலா. கடந்த சில மாதங்களாக இவர் கடுமையான வயிறு வலியால் அவதிபட்டு வந்தார். பல்வேறு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிற்சை பெற்றும் பலன் இல்லாமல் இருந்து வந்த நிலையில் கலா நாகர்கோவில் இளங் கடையில் உள்ள உகா சேவா சேரிட்டபிள் டிரஸ்ட் மருத்துவளையில் சிகிற்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது கர்ப்பபையில் கட்டி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இது எடுத்து பல்வேறு மருத்துவ ஆலோசனைகளுக்கு பின் அந்த பெண்ணிற்கு இன்று மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். மருத்துவ குழுவினர் 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து 6 கிலோ கொண்ட கட்டியை வயிற்றிலிருந்து வெளியே எடுத்தனர்.
கர்ப்பபையில் இருந்த கட்டி இரப்பை, பெருங்குடல், சிறுங்குடல் ஆகியவற்றில் இந்த கட்டி ஒட்டி இருந்ததால் அதனை அகற்றி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தற்போது பெண்மணி நலமுடன் இருப்பதாகவும், தரமற்ற உணவுப் பொருட்கள் தரம் அற்ற குடிநீர் உள்ளிட்ட அவற்றால் இதுபோன்ற கட்டிகள் தற்போது பெருமளவில் பெண்கள் மற்றும் ஆண்களை பாதித்து வருவதாகவும் மருத்துவர் தெரிவித்தார்