தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிட்டார்.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்களில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம்.
முன்னதாக, நாளை பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒருநாளைக்கு முன்னதாக இன்றே தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இன்று செய்தியாளார்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி,
தேர்வு 03.03.2025 முதல் 25.03.2025 வரை நடைபெற்றது. அதற்கான முடிவுகள் இன்று 08.05.2025 வெளியிடடப்பட்டது. தேர்வு எழுதிய மொத்த பள்ளி மாணவ மாணவி;களின் எண்ணிக்கை எண்ணிக்கை 7,92,494, மாணவியர்கள் எண்ணிக்கை 419,316 மாணவர்களின் எண்ணிக்கை 3,73,178 மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி
2024-25 கல்வியாண்டில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 7,53,142 சதவீதத்தில் 95.03%
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100ஃ100 மதிப்பெண் பெற்ற மொத்த மாணவர்கள் விவரங்கள்
தமிழ் – 135 பேர்
கணினி அறிவியல் – 9,536 பேர்
கணினி பயன்பாடுகள் – 4,208 பேர்
கணிதம் – 3,022 பேர்
வேதியியல் – 3,181 பேர்
வணிகவியல் – 1,624 பேர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்ட வாரியாக தேர்சி சதவீதம்
அரியலூர் – 98.82%
ஈரோடு – 97.98%
திருப்பூர் – 97.53%
கோயம்புத்தூர் – 97.48%
கன்னியாகுமரி – 97.01%