சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி பாலூர் கிராம இளைஞர்கள் ஆட்சியரிடம் மனு

சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி பாலூர் கிராம இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு:-

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் ஊராட்சியில் உள்ள பாலூர் கிராமத்தில் வசிக்கும் இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து கோரிக்கை மனு அளித்தனர். பெரம்பூர் முதல் பாலூர் வரை சாலை வசதி, தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும், பாலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய குட்டையினை தூர்த்து, அங்கு விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும், பள்ளி கல்லூரி மாணவர்கள் படிப்பதற்கு சமுதாய கூடம் அமைத்து தர வேண்டும் பாலூர் மயான சாலைக்கு மின் வசதி செய்து தர வேண்டும், பழுதடையும் நிலையில் உள்ள தண்ணீர் தொட்டியை மாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் அவர்கள் மனு அளித்தனர்.

Exit mobile version