:தமிழக வெற்றிக் கழகத்தின் 34வது (அ) வட்டம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தமிழக வெற்றிக் கழகத்தின் 34வது (அ) வட்டம் சார்பில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தங்க தமிழன் தளபதி ச. ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, கொடுங்கையூர் கணேஷ் நகர் பகுதியில் ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வடசென்னை (வடக்கு) மாவட்டச் செயலாளர் வி. சிவா, B.C.A. தலைமை தாங்கினார். வடசென்னை (வடக்கு) மாவட்ட இணைச் செயலாளர் பி. ஜெகன், B.C.A. முன்னிலை வகித்தார். பெரம்பூர் பகுதி (கிழக்கு) செயலாளர் கே.ஜே.எஸ். சௌந்தர்ராஜன் வரவேற்புரை வழங்கினார்.
34வது (அ) வட்டம், கொடுங்கையூர் கணேஷ் நகர் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ஆர். அருண்குமார், என். கார்த்திக், என். வினோத், ஆர். பிரகாஷ், எஸ். சுகுமார், எஸ். சரவணன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொண்டனர்.













