கல்லூரி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொடர்ந்து தொந்தரவு செய்த வெல்டருக்கு 13ஆண்டு சிறை 7 ஆயிரம் அபராதம் விதித்து திருவாரூர் மகிளா நீதிமன்றம் உத்தரவு.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே வீரன்வயல் பகுதியை சேர்ந்தவர் குமரவேல் (28)வெல்டராக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில்
இவர் கடந்த 2022 ஆண்டு ஆகஸ்ட் மாதம் முத்துப்பேட்டை அருகே வசித்து வரும் 17 வயது கல்லூரி மாணவியை பலமுறை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தாக தெரிகிறது இதன் தொடர்ச்சியாக முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டு போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதன் விசாரணை திருவாரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்நிலையில், விசாரணை நிறைவடைந்து இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சரத்ராஜ், குமரவேலுக்கு 13 ஆண்டுகள் சிறை, 7 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
