எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனமும் வேண்டாம் நெல் அரவை ஆலையும் வேண்டாம் மாவட்ட ஆட்சியரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் மாரிமானி குப்பம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தொகுப்பு கூட்டத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது
எங்கள் ஊராட்சியில் நீலி கொள்ளை எம்கிருஷ்ணாபுரம், பூங்கா நகர், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன இந்த கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும் விவசாயத்தை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் குடியிருப்பு அருகில் மூன்று மெகாவாட் சோலார் மின் நிலையம் அமைக்கவும் அதேபோல நெல் அரவை ஆலை அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில்
சோலார் மின் நிலையம் அமைக்கப்பட்டால் இதே போல பல நிலங்கள் கையகப்படுத்தப்படும் அபாயம் ஏற்படும்
நெல் அரவை ஆலை அமைக்கப்பட்டால் அதிலிருந்து வெளியேறும் கழிவுகள் விவசாய நிலங்களில் கலந்து நச்சுத்தன்மை ஏற்படும் எனவே இந்த இரண்டிற்கும் அனுமதி வழங்காமல் இத்திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது…
