திருத்தணியில் தேமுதிக வேட்பாளர் டி கிருஷ்ணமூர்த்தி ஆதரித்து திருத்தணி நகர திமுக சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பு.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் டி கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார். இந்த நிலையில் இன்று திருத்தணி நகர திமுக சார்பில் நகரத்தில் தனது முதல் நாள் பிரச்சாரத்தை தொடங்கினர். தேமுதிக வேட்பாளர் டி கிருஷ்ணமூர்த்தி, திமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் பூபதி திருத்தணி நகர செயலாளர் வினோத் குமார் மற்றும் காங்கிரஸ்,விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆறுமுகசாமி கோவில் தெரு, பெரிய தெரு, கீழ் பஜார், தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் முரசு சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் அப்போது வேட்பாளர் கிருஷ்ணமூர்த்திக்கு மாலை அணிவித்தும் சால்வை அணிவித்தும் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

















