சீர்காழி அருகே கிராம சாலையை சீரமைத்து தர கோரி கிராம மக்கள் சாலை மறியல்

சீர்காழி அருகே கிராம சாலையை சீரமைத்து தர கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசூர் முதல் காப்பியகுடி வரை உள்ள சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவு உள்ள சாலை முழுவதும் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. காப்பியகுடி,மணலகரம், வைரவனிருப்பு,கண்டி ராஜ நல்லூர் உள்ளிட்டா பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இந்த சாலையின் வழியே சென்று வருகின்றனர், குண்டும் குழியுமாக உள்ள சாலையில் பலர் இருசக்கர வாகனத்தில் வரும்பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருவதால் இந்த நான்கு கிலோமீட்டர் கிராம சாலையை சீரமைத்து தரக்கோரி அரசூர் இணைப்பு சாலையில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் மற்றும் கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அப்பொழுது வட்டார வளர்ச்சி அலுவலர் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் சாலையில் பழுதான இடங்களை சரி செய்வதாக கூறினார் இதை ஏற்காத கிராம மக்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் புதிய சாலை முழுவதுமாக அமைத்து தர ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்ததின் பேரில் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்

Exit mobile version