தமிழகத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு தங்குமிடம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மூட்டைக்கு ரூபாய் 40 வாங்கியது உண்மைதான் அமைச்சர் வெங்கட்ராமன் விளக்கம்
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தற்போது ஆட்சியில் இருக்கக்கூடிய த.வெ.க அரசு துறைவாரியாக அமைச்சர்கள் நியமித்து உத்தரவிட்டிருந்தது இந் நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருபுங்கூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நெல் சேமிப்பு கிடங்கை ஆய்வு செய்ய வந்த உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் நெல் மூட்டைகள் அடுக்கி வைத்துள்ளதையும் நெல்லை எடுத்து தரம் குறித்து ஆய்வு செய்தார் பின்னர் இந்த பகுதியில் களநிலவங்களை கேட்டறிந்து பின்னர் செய்தியாளரிடம் கூறும் பொழுது விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூபாய் நாற்பது பெறப்பட்டு வருவது பெரும் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது என்பதற்கு பதில் அளித்த அமைச்சர் நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் பணியாளருக்கு உரிய அடிப்படை வசதிகளான தங்குமிடம் கழிவறை உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் இருந்ததால் அவர்கள் மூட்டைக்கு ரூபாய் 40 வாங்கியது உண்மைதான் இனிவரும் காலங்களில் அவளுக்கு வேண்டிய அடிப்படை வசதி செய்து கொடுத்து அவர்கள் மூட்டை ரூபாய் 40 வாங்காமல் தடுத்து நிறுத்தப்படும் என்றார் மேலும் மழைக்காலங்களில் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனைக்கு வரும் விவசாயிகளுக்கு தனித்தனியாக தார்பாய்கள் வழங்கி அவர்களின் நெல் மூட்டுகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்
