தவெக அரசு பயிர் கடன் முழுமையாக ரத்து செய்யாததற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு.- ஒரு சில விவசாயிகள் பச்சை துண்டை தலையில் முக்காடு போட்டபடி வெளிநடப்பு செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் பங்கேற்ற விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர் கடன்களை முழுமையாக ரத்து செய்ய தவறியதாக தமிழக அரசை கண்டித்த அவர்கள், தேர்தல் வாக்குறுதியின்படி முழு கடன் தள்ளுபடி வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினர்.
இதனால் அதிருப்தி அடைந்த விவசாயிகள், கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் ஒரு சில விவசாயிகள் பச்சை துண்டை தலையில் முக்காடு போட்டபடி வெளிநடப்பு செய்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெளிநடப்பு செய்து தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
