தவெக தலைவர் விஜய் முதலமைச்சரானதை முன்னிட்டு மயிலாடுதுறையில் தவெகவின் கொள்கை தலைவர்களின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அன்னதானம் அளித்து தவெகவினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல்:-
தமிழ்நாட்டில் புதிதாக உருவான தமிழக வெற்றி கழகம் சந்தித்த முதல் தேர்தலிலே 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடத்துசாரிகள், ஐயூஎம்எல் ஆதரவுடன் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதிமுகவினரின் ஒரு பிரிவும் ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட தவெகவினர் தங்கள் கொள்கை தலைவர்களுக்கு மரியாதை செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் தவெகவின் கொள்கை தலைவர்களான தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் உருவப்படங்களை வைத்து மாவட்ட செயலாளர் கோபிநாத் தலைமையில் மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றதை கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அன்னதானம் அளித்தும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் நகர பொறுப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்ட 500க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். பேருந்து நிலையம் அருகாமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது













