விழுப்புரம் மாவட்ட தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் உதவி ஆணையராக திருமதி மீனாட்சி அவர்கள் பணியாற்றி வருகிறார் அவரது பணிகளை பாராட்டியும் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதற்காக நேஷனல் ஃப்ரெண்ட் ஆப் இந்தியன் ட்ரேட் யூனியன் தொழிற்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆலங்குப்பம் பாலா அவர்கள் சந்தித்து மலர் மாலை மற்றும் சால்வை அணிவித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவித்தார் பின்னர் பிறகு NFITU மாநில பொதுச்செயலாளர் பாலா கூறுகையில் தமிழ்நாட்டிலே விழுப்புரம் மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம் அதில் அதிக கூலி தொழிலாளர்களைக் கொண்ட மாவட்டமாக இருந்து கொண்டு வருகிறது தொழிலாளர் துறை உதவி ஆணையர் திருமதி மீனாட்சி அவர்கள் பதவி ஏற்ற காலம் முதல் இன்று வரை நேர்மையான முறையில் கண்ணியமிக்க உதவி ஆணையராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு இரவு பகல் பார்க்காமல் பணியாற்றி வருகிறார். தமிழக அரசு கொண்டு வந்த நல வாரிய திட்டங்களை உடனடியாக அனைத்து தொழிற்சங்கங்களை அழைத்து அவர்களுக்கு எளிமையான முறையில் புரிய வைத்து இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று கூறுவார். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட நலவாரிய அலுவலகங்களுக்கு சென்றிருக்கின்றேன். விழுப்புரம் மாவட்டம் செயல்படுவது போன்று இதுவரை எந்த மாவட்டம் செயல்படவில்லை என்று தெரிவித்திருந்தார் பிறகு அனைத்து தொழிலாளர்களின் மனதில் காவல் தெய்வமாக வாழ்ந்தும் வருகிறார் என்று தெரிவித்தார் இதில் மாவட்ட செயலாளர் திருமதி பிரியா முருகேசன், எட்டியப்பன், ராஜேந்திரன், சேட்டு, மும்மூர்த்தி, செஞ்சி ராஜாராம், பெருமாள், கிருபாகரன் ,குப்புசாமி, குத்துஸ்கான், ரேவதி, சரிதா ,இந்திரா காந்தி மற்றும் சக்தி தொழிற்சங்க அலுவலக ஊழியர்கள் ஐஸ்வர்யா நிஷா மற்றும் தொழிற்சங்க பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

















