தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும். மே 7 முதல் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
உயர்கல்வியில் சேரவுள்ள மாணவர்களுக்கு விண்ணங்கங்கள் வழங்கும் பணியானது தொடங்கவுள்ளது. அந்த வகையில் (மே 7ஆம் தேதி) நாளை மறுநாள் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் 6ஆம் தேதி வரை பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் https://www.tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது