திருப்பத்தூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு முதல் நாள் முதல் தேர்வு 63 தேர்வு மையங்களில் தமிழ் முதல்தாள் தேர்வு தொடங்கியது தேர்விற்கு ஆர்வத்துடன் பரபரப்பாக தேர்வு மையத்திற்கு வந்து சேர்ந்த மாணவ மாணவிகள் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
தமிழகம் முழுவதும் பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் தேதி முதல் முதல் வருகின்ற 27 ஆம் தேதி வரை பொது தேர்வு நடைபெற உள்ளது.
இந்த பொது தேர்வில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 6535 மாணவர்கள், 7166 மாணவிகள் என மொத்தம் 13701 மாணவமாணவிகள் மற்றும் 461 மாணவ மாணவிகள் (Arrear) தேர்வு 63 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர்.
இந்த நிலையில் முதல் நாளான இன்று 12-ஆம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் மாணவர்கள் ஆர்வத்துடன் பரபரப்பாக முதல் நாள் தேர்வினை எழுத தேர்வு மையத்திற்கு வந்தனர்.
மேலும் இந்த தேர்வினை கண்காணிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் உட்பட 10 உயர் அலுவலர்களும், 6 வினாத்தாள் கட்டுகாப்பாளர்களும், 63 தேர்வு மைய கண்காணிப்பாளர்களும், 67 துறை அலுவலர்களும், 15 வழித்தடம் அலுவலர்களும், 15 பறக்கும் படை அலுவலர்களும், 110க்கு squadஅலுவலர்களும் ,1080 அரை கண்காணிப்பாளர்கள், 150 சொல்வதை எழுதும் ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி திருப்பத்தூர் நகர மையப்பகுதியில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திடீரென ஆய்வு மேற்கொண்டு தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
