விழுப்புரம் அருகே ஆனாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மதுமிதா, பானாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பவித்ரா. மல்லர் கம்பம் வீராங்கனைகள். இவர்கள் இருவரும், கடந்த 30ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், ஏர்வாய்பட்டினம் கிராமத்தில் உள்ள விவேகானந்தா பள்ளியில் நடந்த மாநில அளவிலான மல்லர் கம்பம் போட்டியில் பங்கேற்றனர். இந்த போட்டியில், பல மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில், மதுமிதா, பவித்ரா ஆகியோர் முதலிடத்தை பிடித்து, விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமையை சேர்த்தனர். மேலும், இவர்கள், நவம்பர் மாதம், மகராஷ்டிரா மாநிலம், உஜ்ஜெயினில் நடக்கவுள்ள தேசிய அளவிலான மல்லர் கம்பம் போட்டியில் பங்கேற்கும் தகுதியை பெற்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த வீராங்கனைகள் மதுமிதா, பவித்ரா ஆகியோர், முன்னாள் அமைச்சர் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் பொன். கௌதசிகாமணி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
