சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் நடித்து வந்த சூர்யா, தற்போது அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் புதிய படத்தை பிரபல ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வருகிறார்.
‘கருப்பு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படத்தில் சுவாசிகா, சிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
நடிகை த்ரிஷா, சூர்யாவுடன் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். இப்போது, ‘கருப்பு’ திரைப்படத்தின் நாயகியாகவும் அவர் இணைந்துள்ளார். இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர். பிரபு இப்படத்தை தயாரிக்கிறார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், முதல் லுக் போஸ்டரும் அண்மையில் வெளியிடப்பட்டது.
‘கருப்பு’ திரைப்படம், இந்த ஆண்டு இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.