December 2, 2025, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அரசியலில் கண்ணியத்தின் அடையாளம் – பேரறிஞர் அண்ணா !

by Priscilla
September 15, 2025
in News
A A
0
அரசியலில் கண்ணியத்தின் அடையாளம் – பேரறிஞர் அண்ணா !
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தமிழ்நாட்டின் நவீன அரசியல் வரலாற்றில் கண்ணியத்துக்கும், மனிதநேயத்துக்கும், தலைமைப் பண்புகளுக்கும் என்றும் உதாரணமாகத் திகழ்பவர் பேரறிஞர் அண்ணாதுரை. அரசியல் எதிரிகளைப் போலும் மதித்து நடந்தவர் என்ற தனித்துவத்தால், அவர் இன்று வரை மக்களாலும், அரசியல்வாதிகளாலும் நினைவு கூறப்படுகிறார்.

பெரியாரின் சீடராகத் துவங்கிய அண்ணா, கருத்து முரண்பாடுகள் காரணமாக தனித்து கட்சியை அமைத்தாலும், ஒருநாளும் அவரை தாக்கிக் கூறவில்லை. அதேபோல், காமராஜரை எதிர்த்து அரசியல் செய்தாலும், அவரின் நேர்மை, திறமை ஆகியவற்றை புகழ்ந்தவர் அண்ணா. காமராஜர் தேர்தலில் தோற்றபோது மனவேதனை அடைந்து “இன்னொரு தமிழன் அவரைப் போன்ற நிலைக்கு வர நூறு ஆண்டுகள் ஆகும்” என்று வருந்தியதும் அவரது அரசியல் பண்பின் சான்றாகும்.

1937 ஆம் ஆண்டில் ராஜாஜி கொண்டு வந்த இந்தி கட்டாயப் பாடத்திட்டத்தை எதிர்த்து போராடியவர் அண்ணா. ஆனால், 1964 ஆம் ஆண்டில் மீண்டும் எழுந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு, தனது முன்னாள் எதிரியான ராஜாஜியையே தலைமை ஏற்க அழைத்தது அண்ணாவின் உயர்ந்த மனப்பான்மையையே காட்டுகிறது.

அண்ணாவின் அரசியல் பாணியில், எதிரிகளுக்கும் அன்பு காட்டும் தன்மை பிரதானம். சம்பத் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தில், “தம்பி பசி பொறுக்கமாட்டானே” என்று கவலைப்பட்டவர், பழங்களைத் தாங்கிச் சென்ற சம்பவம் இன்று வரை பேசப்படுகிறது.

1967 ஆம் ஆண்டு முதல்வராகப் பதவியேற்ற அண்ணா, மாநில அரசியலுக்கே தனித்துவ அடையாளம் அமைத்தார். டெல்லியை மையமாகக் கொண்ட அரசியல் சூழலில், மாநிலங்களே இந்தியாவின் அடிப்படை என்று வலியுறுத்தியவர். ‘தேசியம்’ என்பதற்கு பதில் ‘தாயகம்’ என்ற கருத்தை முன்வைத்தார்.

தேசிய அளவிலும் அண்ணா அனைவராலும் மதிக்கப்பட்டார். காந்தியை “உலகின் ஒளி” என்றும், நேருவை “கட்டிமுடிக்கப்பட்ட கோபுரம்” என்றும் புகழ்ந்தார். நாடாளுமன்றத்தில் இடதுசாரி பூபேஷ் குப்தாவின் உரைகளை தவறாமல் கேட்டவர்; வாஜ்பாயின் பேச்சை ரசிக்க பொதுக்கூட்டங்களில் தரையில் அமர்ந்தும் கேட்டவர்.

அண்ணாவின் மீது வாஜ்பாய் கொண்டிருந்த மதிப்பும் குறிப்பிடத்தக்கது. தனது கவிதைத் தொகுப்பை தமிழில் மொழிபெயர்த்தபோது அதை அண்ணாவுக்கே அர்ப்பணித்தார். “தமிழக அரசியலின் ஜாம்பவான் அண்ணாதுரை, சிறந்த நாடாளுமன்ற வாதியும் உணர்வுபூர்வமான தலைவரும் ஆவார்” என்று வாஜ்பாய் பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.

அரசியலில் கண்ணியமும், மனிதநேயமும் எவ்வாறு இணைந்து நிலைக்க முடியும் என்பதை வாழ்வில் நிரூபித்தவர் பேரறிஞர் அண்ணா. அதனால் தான், அவர் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் என்றும் கண்ணியத்தின் அடையாளமாகத் திகழ்கிறார்.

Tags: ANNAS BIRTHDAYC N ANNADURAItamil nadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வக்பு சட்டத்திருத்தப் பிரிவுகளுக்கு இடைக்காலத் தடை – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

Next Post

மகளிர் – குழந்தைகள் நலனுக்கான தேசிய திட்டம் : செப்டம்பர் 17-ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

Related Posts

திமுகவின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை தேவை – நயினார்
News

சேராத இடம் சேர்ந்தார் செங்கோட்டையன், என்ன பிரச்சனை வந்தாலும் EPS-ஐ விட மாட்டோம் – நைனார்

December 2, 2025
இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு
News

இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

December 2, 2025
குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு
News

குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு

December 2, 2025
கொடைக்கானல் சுற்றுலா தளங்கள் டிட்வா புயல் காரணமாக மூடப்பட்டபின் மீண்டும் திறப்பு
News

கொடைக்கானல் சுற்றுலா தளங்கள் டிட்வா புயல் காரணமாக மூடப்பட்டபின் மீண்டும் திறப்பு

December 2, 2025
Next Post
மகளிர் – குழந்தைகள் நலனுக்கான தேசிய திட்டம் : செப்டம்பர் 17-ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

மகளிர் – குழந்தைகள் நலனுக்கான தேசிய திட்டம் : செப்டம்பர் 17-ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
டி.கே.சிவக்குமாருடன் கருத்துவேறுபாடில்லையாம் – சொல்கிறார் சித்தராமையா

டி.கே.சிவக்குமாருடன் கருத்துவேறுபாடில்லையாம் – சொல்கிறார் சித்தராமையா

December 2, 2025
எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

December 2, 2025
இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

December 2, 2025
திமுகவின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை தேவை – நயினார்

சேராத இடம் சேர்ந்தார் செங்கோட்டையன், என்ன பிரச்சனை வந்தாலும் EPS-ஐ விட மாட்டோம் – நைனார்

December 2, 2025
திமுகவின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை தேவை – நயினார்

சேராத இடம் சேர்ந்தார் செங்கோட்டையன், என்ன பிரச்சனை வந்தாலும் EPS-ஐ விட மாட்டோம் – நைனார்

0
இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

0
குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு

குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு

0
கொடைக்கானல் சுற்றுலா தளங்கள் டிட்வா புயல் காரணமாக மூடப்பட்டபின் மீண்டும் திறப்பு

கொடைக்கானல் சுற்றுலா தளங்கள் டிட்வா புயல் காரணமாக மூடப்பட்டபின் மீண்டும் திறப்பு

0
திமுகவின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை தேவை – நயினார்

சேராத இடம் சேர்ந்தார் செங்கோட்டையன், என்ன பிரச்சனை வந்தாலும் EPS-ஐ விட மாட்டோம் – நைனார்

December 2, 2025
இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

December 2, 2025
குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு

குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு

December 2, 2025
கொடைக்கானல் சுற்றுலா தளங்கள் டிட்வா புயல் காரணமாக மூடப்பட்டபின் மீண்டும் திறப்பு

கொடைக்கானல் சுற்றுலா தளங்கள் டிட்வா புயல் காரணமாக மூடப்பட்டபின் மீண்டும் திறப்பு

December 2, 2025

Recent News

திமுகவின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை தேவை – நயினார்

சேராத இடம் சேர்ந்தார் செங்கோட்டையன், என்ன பிரச்சனை வந்தாலும் EPS-ஐ விட மாட்டோம் – நைனார்

December 2, 2025
இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

December 2, 2025
குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு

குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு

December 2, 2025
கொடைக்கானல் சுற்றுலா தளங்கள் டிட்வா புயல் காரணமாக மூடப்பட்டபின் மீண்டும் திறப்பு

கொடைக்கானல் சுற்றுலா தளங்கள் டிட்வா புயல் காரணமாக மூடப்பட்டபின் மீண்டும் திறப்பு

December 2, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.