ஏடிஎம்களில் ரூ.500 நோட்டுகள் நிறுத்தம் ? இது உண்மையா.. ?

அனைத்து வங்கிகளும் செப்டம்பர் மாத இறுதிக்குள் ஏடிஎம்களில் இருந்து ரூ.500 நோட்டுகளை வழங்குவதை நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி கூறியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றது.

ஏடிஎம்களில் ரூ.500 நோட்டுகளின் எண்ணிக்கையை முதலில் 75% ஆகவும், பின்னர் மார்ச் 31, 2026ம் ஆண்டுக்குள் 90% ஆகவும் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் உலா வருகின்றன. இது மக்களிடையே பரபரப்பு நிலவி, குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ரூ.100 மற்றும் ரூ.200 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து, இந்த ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்களில் இருந்து அடிக்கடி வழங்கப்பட்டால், புழக்கத்தில் உள்ள ரூ.500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருப்பதாகவும்,

இருந்தாலும் , ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான எந்தவொரு திட்டத்தையும் ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றும்,

அதனால், மக்கள் குழப்பமடைய தேவையில்லை. வழக்கம் போல் 500 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

Exit mobile version