August 12, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கட்டி முடித்தும் 2 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை அரசுக்கு பண விரயம்

by sowmiarajan
December 28, 2025
in News
A A
0
கட்டி முடித்தும் 2 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை அரசுக்கு பண விரயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தேனி மாவட்டம் போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ரங்கநாதபுரத்தில், 13 லட்சம் ரூபாய் பொதுமக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டிடம், பணிகள் முடிந்து இரண்டு ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் முடங்கிக் கிடக்கிறது. இதனால் அரசுக்கு தேவையற்ற வாடகைச் செலவும், பொதுமக்களுக்கு அலைச்சலும் ஏற்பட்டு வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ரங்கநாதபுரம், அம்பேத்கர் தெரு, அமராவதி நகர், மனோரமா நகர், கிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்ப அட்டையாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களைப் பெற ரங்கநாதபுரத்தில் உள்ள ரேஷன் கடையையே சார்ந்துள்ளனர். இந்த நியாயவிலைக் கடை கடந்த பல ஆண்டுகளாக ஒரு சிறிய வாடகை கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது. போதிய இடவசதி இல்லாத காரணத்தால், மூட்டைகளை அடுக்கி வைக்க முடியாமல் ஊழியர்களும், மழையிலும் வெயிலிலும் நீண்ட வரிசையில் நின்று பொருட்களைப் பெற முடியாமல் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மக்களின் இந்த நீண்ட கால இன்னல்களைக் கருத்தில் கொண்டு, சட்டமன்ற உறுப்பினர் (MLA) தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சுமார் 13 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. வர்ணம் பூசப்பட்டு, மின்சார வசதிகளுடன் பொலிவாகக் காட்சியளிக்கும் இந்த கட்டிடம், பயன்பாட்டிற்குத் தயார் நிலையில் இருந்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.

திறப்பு விழாவுக்காகக் காத்திருக்கும் இந்த கட்டிடத்தால், ஏற்கனவே இயங்கி வரும் வாடகை கடைக்கு மாதம் தோறும் அரசு பல ஆயிரம் ரூபாயை வாடகையாகச் செலுத்தி வருகிறது. இது அரசுப் பொக்கிஷத்திற்கு ஏற்படும் தேவையற்ற வருவாய் இழப்பாகும். “புதிய கட்டிடம் தயாராக இருக்கும்போது, எதற்காக வாடகை கட்டிடத்தில் கடையை நடத்த வேண்டும்? மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கட்டிடம் எப்போது பயன்பாட்டிற்கு வரும்?” என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும், பயன்பாடின்றி பூட்டிக்கிடக்கும் புதிய கட்டிடத்தைச் சுற்றிலும் புதர்கள் மண்டத் தொடங்கியுள்ளன. இதனால் கட்டிடத்தின் உறுதித்தன்மையும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, ரங்கநாதபுரத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ரேஷன் கடையைத் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்றும், அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பைத் தடுக்க வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: funds wastegovernmentpublicRATIONshopunopened
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மேகமலை புலிகள் காப்பகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு கள ஆய்வு

Next Post

மூணாறில் காங்கிரஸ் வெற்றி; தேவிகுளம், இடமலைக்குடியில் இடதுசாரிகள் ஆதிக்கம்!

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை
News

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு
News

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 
News

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026
Next Post
மூணாறில் காங்கிரஸ் வெற்றி; தேவிகுளம், இடமலைக்குடியில் இடதுசாரிகள் ஆதிக்கம்!

மூணாறில் காங்கிரஸ் வெற்றி; தேவிகுளம், இடமலைக்குடியில் இடதுசாரிகள் ஆதிக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

0
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

0
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

0
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

0
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Recent News

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.