February 11, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“பாம்பு போன பாதைதான் ஆறு” : ஈரோட்டில் விஜய்யின் பேச்சு கவனம் ஈர்த்தது

by Priscilla
December 18, 2025
in News
A A
0
“பாம்பு போன பாதைதான் ஆறு” : ஈரோட்டில் விஜய்யின் பேச்சு கவனம் ஈர்த்தது
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

ஈரோடு:
ஈரோடு பெருந்துறையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டத்தில், கட்சித் தலைவர் நடிகர் விஜய் ஆற்றிய உரையில் இடம்பெற்ற ஒரு “பாம்பு கதை” மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றது.

கூட்டத்தில் பேசிய விஜய், ஈரோடு மண்ணின் பாரம்பரியமும், விவசாயச் சிறப்பும் குறித்து பேசினார். “பொதுவாக நல்ல காரியத்தை மஞ்சளோடு தொடங்குவோம். வீட்டில் அம்மா, அக்கா, தங்கைகள் நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்று மஞ்சள் கட்டி வேண்டுவார்கள். அந்த மங்களகரமான மஞ்சள் விளையும் பூமிதான் ஈரோடு,” என அவர் குறிப்பிட்டார். விவசாயத்திற்கு பெயர் பெற்ற மண் இது என்றும், இம்மக்கள் தன்னை நம்பி ஆதரவு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், காலிங்கராயன் அணை குறித்து பேசிய விஜய், “அந்த காலத்து ஹீரோ காலிங்கராயன். அவர் இந்த அணையை எப்படி கட்டினார் தெரியுமா? ஒரு பாம்பு சென்ற பாதையை அடிப்படையாக வைத்து, அந்த திசையில் நதியின் ஓட்டத்தை நிர்ணயித்து அணையை கட்டியதாக ஒரு கதை உண்டு. அப்படிப்பட்ட தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டவர்கள் வாழ்ந்த மண் இது,” எனக் கூறினார். இந்தப் பகுதி கூட்டத்தில் இருந்தவர்களிடையே கவனம் பெற்றது.

அத்திக்கடவு–அவிநாசி திட்டம் விரிவுபடுத்தப்படாததால் இப்பகுதி வறட்சியை சந்தித்து வருவதாகவும், அந்த திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்காமல் அரசாங்கம் கண்காட்சிகளில் கவனம் செலுத்துவதாகவும் அவர் விமர்சனம் செய்தார்.

அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் தமிழ்நாட்டின் பொது சொத்து என்றும், அவர்களின் பெயரை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தக் கூடாது என்றும் விஜய் கூறினார். “எங்களுக்கு பயமில்லை என்று சொல்லிக்கொண்டே பயந்து கத்தும் சிறுவனைப் போல சிலர் நடந்து கொள்கிறார்கள்,” என மறைமுகமாக விமர்சனம் செய்த அவர், “பெயர்களை மட்டும் சொல்லி அரசியல் செய்யாமல், மக்கள் பிரச்சனைகளில் நேரடியாக களத்தில் நிற்க வேண்டும்,” என வலியுறுத்தினார்.

இறுதியாக, “எங்களுக்கு செய்ய வேண்டிய வேலை அதிகம். மக்கள் நலனுக்காக ஒரே பாதையில் அரசியல் செய்து கொண்டே போவோம்,” எனக் கூறி தனது உரையை முடித்தார்.

Tags: ACTOR VIJAYerodeERODE MEETINGtn politicsTVKTVK VIJAYVIJAY CAMPAIGNVIJAY SPEECH
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

‘புரட்சி த…’ என தடுமாறி ‘தளபதி’ என சமாளித்த செங்கோட்டையன் – ஈரோடு கூட்டத்தில் கவனம் ஈர்த்த தருணம்

Next Post

“தீயசக்திக்கும் தூயசக்திக்கும் இடையேதான் அரசியல் போட்டி” – ஈரோட்டில் விஜய் கடும் தாக்கு

Related Posts

9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது
News

9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

February 10, 2026
20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்
News

20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

February 10, 2026
மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்
News

மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

February 10, 2026
மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது
News

மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது

February 10, 2026
Next Post
“தீயசக்திக்கும் தூயசக்திக்கும் இடையேதான் அரசியல் போட்டி” – ஈரோட்டில் விஜய் கடும் தாக்கு

“தீயசக்திக்கும் தூயசக்திக்கும் இடையேதான் அரசியல் போட்டி” – ஈரோட்டில் விஜய் கடும் தாக்கு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
நமது மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா 50-வது பிறந்தநாள் உதவிகள் வழங்கல்

நமது மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா 50-வது பிறந்தநாள் உதவிகள் வழங்கல்

December 27, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

February 9, 2026
மயிலாடுதுறையில் நகராட்சி தூய்மைபணியாளர்களுக்கு காலைஉணவு வழங்கும் திட்டத்தைMLAநகராட்சித் நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தனர்

மயிலாடுதுறையில் நகராட்சி தூய்மைபணியாளர்களுக்கு காலைஉணவு வழங்கும் திட்டத்தைMLAநகராட்சித் நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தனர்

February 9, 2026
பணி நிரந்தரம் கோரி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் – மாநகராட்சிக்கு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் அவகாசம்

பணி நிரந்தரம் கோரி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் – மாநகராட்சிக்கு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் அவகாசம்

August 11, 2025
9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

0
20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

0
மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

0
மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது

மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது

0
9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

February 10, 2026
20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

February 10, 2026
மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

February 10, 2026
மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது

மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது

February 10, 2026

Recent News

9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

February 10, 2026
20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

February 10, 2026
மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

February 10, 2026
மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது

மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது

February 10, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.