திருப்பத்தூரில் சி எஸ் ஆர் நிதியின் கீழ் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 15 மின்கலன் வாகனங்களை வனத்துறை அமைச்சர் வழங்கினார்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை கந்திலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் தொடர்ந்து…
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை நகராட்சிகளில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் குப்பைகளை சேகரிப்பதற்கு பயன்படும் வகையில் சமூகப் பொறுப்பு நிதியின் மூலம் ஆர்டிஎஸ் நிறுவனத்தின் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ளான 15 மின்கலன் வாகனங்கள் வழங்கும் திட்டத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இதில் திருப்பத்தூர் நகராட்சிக்கு 10 வாகனங்களும் ஜோலார்பேட்டை நகராட்சிக்கு ஐந்து வாகனங்களும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் பெரியாரின் 107 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன் நகராட்சி ஆணையர்கள் சாந்தி, இளையராணி துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.













