August 19, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சபரிமலையில் மகர விளக்கு பூஜைகள் கோலாகலத் தொடக்கம் 24 மணி நேரத்தில் 1.20 லட்சம் பக்தர்கள் தரிசனம்

by sowmiarajan
January 1, 2026
in News
A A
0
சபரிமலையில் மகர விளக்கு பூஜைகள் கோலாகலத் தொடக்கம் 24 மணி நேரத்தில் 1.20 லட்சம் பக்தர்கள் தரிசனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகர விளக்கு மற்றும் மகரஜோதி பெருவிழாவிற்காகக் கோயில் நடை திறக்கப்பட்ட முதல் 24 மணி நேரத்திலேயே பக்தர்களின் வருகை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டதிலிருந்து நேற்று மாலை 5:00 மணி வரையிலான ஒரு நாளில் மட்டும், ஆன்லைன் முன்பதிவு மூலமாக சுமார் 1,20,256 பக்தர்கள் ஐயப்பனைத் தரிசித்துள்ளனர். இதில் நடை திறக்கப்பட்ட முதல் நாளில் 57,256 பேரும், நேற்று மாலை 5:00 மணி வரை 63,000 பேரும் தரிசனம் செய்துள்ளதாகத் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது. மகர விளக்கு காலத்தின் மிக முக்கிய வழிபாடான நெய்யபிஷேகம் நேற்று அதிகாலை 3:15 மணிக்குத் தொடங்கியது. முன்னதாக அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தந்திரி மகேஷ் மோகனரரு ஐயப்பனுக்கு முதல் நெய்யபிஷேகத்தைச் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கணபதி ஹோமம் மற்றும் மகர விளக்கு காலத்தின் முதல் களபாபிஷேகம் உள்ளிட்ட சிறப்புப் பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.

பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சன்னிதானம் மற்றும் பம்பை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் பலப்படுத்தப்பட்டுள்ளன. முதற்கட்ட பாதுகாப்புப் பணிகளுக்காக 10 டி.எஸ்.பி.,க்கள், 35 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்கள் உட்பட மொத்தம் 1,593 போலீசார் சன்னிதானத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணிக்கும் தனி அதிகாரியாக எஸ்.பி., எம். கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், மலைப்பாதையில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தரவும் போலீஸ் மற்றும் தன்னார்வலர் குழுவினர் 24 மணி நேரமும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

வருகிற ஜனவரி 14-ஆம் தேதி சிகர நிகழ்வான மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. அன்று மாலை தீபாராதனைக்குப் பிறகு பொன்னம்பல மேட்டில் ஜோதி தெரிவதுடன், வானில் மகர நட்சத்திரமும் பிரகாசிக்கும். கடந்த காலங்களில் புல்மேடு பகுதியில் ஏற்பட்ட விபத்து மற்றும் அசம்பாவிதங்களை மனதிற்கொண்டு, இந்த ஆண்டு மகரஜோதி நாளன்று பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. ஜோதி தரிசனத்தன்று பக்தர்கள் வருகையை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் அனுமதிக்காமல் கட்டுப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சன்னிதானம் முதல் நிலக்கல் வரை சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags: darshanMakaravilakkuRituals Devoteessabarimala
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

குமுளி சோதனைச் சாவடியில் வாகனங்களுக்குக் கிருமிநாசினி தெளிப்பு மற்றும் தீவிர மருத்துவப் பரிசோதனை.

Next Post

முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதி மனைவியின் உடல் மீட்பு

Related Posts

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு
News

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

August 18, 2026
சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
News

சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

August 18, 2026
திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்
News

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

August 18, 2026
பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு
News

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

August 18, 2026
Next Post
முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதி மனைவியின் உடல் மீட்பு

முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதி மனைவியின் உடல் மீட்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
நாடு முழுக்க உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்.. புதிய சம்பளம் எவ்வளவு? 

நாடு முழுக்க உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்.. புதிய சம்பளம் எவ்வளவு? 

June 8, 2025
டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

August 18, 2026
சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

August 18, 2026
திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

August 18, 2026
டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

0
சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

0
திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

0
பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

0
டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

August 18, 2026
சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

August 18, 2026
திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

August 18, 2026
பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

August 18, 2026

Recent News

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

August 18, 2026
சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

August 18, 2026
திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

August 18, 2026
பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

August 18, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.