May 4, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தமிழகத்தில் எம்பி, எம்எல்ஏக்களின் தூக்கத்தை தொலைக்க வைத்த சென்னை ஹைகோர்ட் !

by Priscilla
November 14, 2025
in News
A A
0
தமிழகத்தில் எம்பி, எம்எல்ஏக்களின் தூக்கத்தை தொலைக்க வைத்த சென்னை ஹைகோர்ட் !
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சென்னை :
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் ஆண்டாண்டுகளாக நிலுவையில் போய்க்கொண்டிருக்கும் சூழலில், அவற்றை தாமதமின்றி முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் மக்கள் பிரதிநிதிகள் தொடர்பான வழக்குகளை மாநில உயர்நீதிமன்றங்களே கண்காணிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, 2020 முதல் இந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து அவ்வப்போது பரிசீலித்து வருகிறது.

வழக்கின் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட அமிக்கஸ் கியூரி, மூத்த வக்கீல் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் நீதிமன்றத்தில் ஆஜரானபோது, தமிழ்நாட்டில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது 193 வழக்குகளும், புதுச்சேரியில் 23 வழக்குகளும் என மொத்தம் 216 வழக்குகள் இன்னமும் பல நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார்.

நீண்ட காலமாக நிற்கும் விசாரணைக்கு இடைக்கால தடை காரணம்

இந்த வழக்குகளில் பலவும் நீண்ட காலமாக முன்னேற்றமின்றி நிற்கும் நிலையை நீதிமன்றம் கவனித்தது. உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை உத்தரவுகள் காரணமாக கீழ்நீதிமன்றங்கள் பல வழக்குகளை முன்னெடுக்க முடியாமல் இருப்பது அமிக்கஸ் அறிக்கையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, எத்தனை வழக்குகள் தடை உத்தரவின் கீழ் இருக்கின்றன என்பது குறித்து இரண்டு வாரங்களில் முழுமையான விவரம் தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவிட்டது.

சிறப்பு நீதிமன்றங்களுக்கு கடும் எச்சரிக்கை

முதல் பெஞ்ச் — தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் — பிறப்பித்த உத்தரவுகள் பின்வருமாறு:

உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றம் தடை விதிக்காத வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் தாமதமின்றி விசாரிக்க வேண்டும்.

5 ஆண்டுகளைத் தாண்டி நிலுவையில் உள்ள வழக்குகளை முன்வைத்து விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும்.

தேவையில்லாமல் தரப்புகள் வாய்தா கேட்டால், இனி அதை வழங்கக்கூடாது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும் சில வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யாமலே இருப்பது கண்டறியப்பட்டதால், இத்தகைய வழக்குகளுக்கு முக்கியத்துவம் அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

சாட்சிகள் நீதிமன்றத்துக்கு வந்திருந்தால், அவர்கள் சாட்சியத்தை பதிவு செய்யாமல் வழக்கு ஒத்திவைக்கக் கூடாது.

உள்கட்டமைப்பு குறைபாடுகள் பரிசீலனை

சிறப்பு நீதிமன்றங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளதாக தெரிவித்ததையடுத்து, விசாரணை வேகத்தை பாதிக்கும் இக்குறைபாடுகள் உள்ளதா என்பதை அறிய ஐ.டி. பிரிவு பதிவாளரிடமிருந்து முழுமையான அறிக்கை பெற ஹைகோர்ட் உத்தரவிட்டது. தலைமை பதிவாளர் இதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கு விசாரணை வருகிற 25ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Tags: chennai high courtchennnaiMLAsMPstn politics
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

உண்மையான வாக்காளர்களின் உரிமை பறிக்கப்படாது பொள்ளாச்சி ஜெயராமன்

Next Post

விருச்சிகம் – சோதனை எல்லாம் சாதனை ஆகப்போகிறது | Viruchiga Rasi | Sara Tarrot | Retro Aanmeegam

Related Posts

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை
News

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா
News

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா
News

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா
News

செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

May 3, 2026
Next Post
விருச்சிகம் – சோதனை எல்லாம் சாதனை ஆகப்போகிறது | Viruchiga Rasi | Sara Tarrot | Retro Aanmeegam

விருச்சிகம் - சோதனை எல்லாம் சாதனை ஆகப்போகிறது | Viruchiga Rasi | Sara Tarrot | Retro Aanmeegam

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

செம்பனார்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

0
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

0
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

May 3, 2026

Recent News

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

May 3, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.