தை மாத கடைவெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறை திரு இந்தளூர் அண்ணா நகரில் உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற 67 ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்:-
தை மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மயிலாடுதுறை திருஇந்தளூர் அண்ணா நகரில் 67 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காவேரி நாலு கால் மண்டபத்தில் சக்தி கரகம் அலங்கரிக்கப்பட்டு புறப்பாடு செய்யப்பட்டது. விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டியும், வாயில் 12 அடி நீளஅளகு குக்தியும், கூண்டு காவடி எடுத்தும் பம்பை உடுக்கை உள்ளிட்ட மேளதாளம் வாத்தியங்கள் முழங்க வீதியுலாவாக ஆலயம் வந்தடைந்தனர். இதில் பச்சைக்காளி பவளக்காளி உள்ளிட்ட காளி ஆட்டங்களுடன் இளைஞர்களின் உற்சாக முழக்கத்துடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சக்தி கரகம் காப்பு கட்டிய பக்தர்களுடன் ஆலயம் வந்தடைந்தது. தொடர்ந்து ஆலயத்தின் எதிரே அமைக்கப்பட்டுள்ள குண்டத்தில் சக்தி கரகம் இறங்கியது. இதனைத் தொடர்ந்து வானவேடிக்கைகள் முழங்க பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேற்று கடனை செலுத்தினர். தொடர்ந்து ஆலய வாசலில் நடைபெற்ற காளி ஆட்டங்கள் பக்தர்களை பரவசப்படுத்தியது. ஏராளமான பக்தர்கள் தீமிதி திருவிழாவை சந்து தரிசனம் செய்தனர்.
