மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா; ஏராளமான பக்தர்கள் வழிபாடு:-

மயிலாடுதுறை திருஇந்தளூரில் பழமை வாய்ந்த காளியம்மன் கோயில் உள்ளது. இப்பகுதி மக்கள் பலரின் குலதெய்வ கோயிலாக அமைந்துள்ள இக்கோயிலின் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி விரதம் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் காவிரி கரையில் இருந்து சக்தி கரகம் எடுத்து மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலை அடைந்தனர். அங்கு கோயிலின் முன்பு உற்சவமூர்த்திகள் எழுந்தருள செய்யப்பட்டு, பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

Exit mobile version