டிசம்பர் ஒன்றாம் தேதி, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகளின் 103 வது ஆராதனை விழா மயிலாடுதுறையில் நடைபெறுகிறது. இதில் மயிலாடுதுறை மாவட்ட நாட்டுபுற கலைஞர்கள் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் இருந்து நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இதில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு நிர்வாகிகள் பங்கேற்று, நலிந்த நாட்டுப்புற கலைஞர்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் வகையில், அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்றும், நலிந்த கலைஞர்களுக்கு அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு, தமிழ்நாடு நாடக கலைஞர்கள் இன்று மனு அளித்தனர்














