திருவாரூர் அருகே குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தடுப்புகளை அகற்றி ஆலயத்திற்கு செல்ல முயன்றதால் பரபரப்பு

திருவாரூர் அருகே கோவில் மனைகளில் குடியிருந்து வருபவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தடுப்புகளை அகற்றி ஆலயத்திற்கு செல்ல முயன்றதால் பரபரப்பு.

திருவாரூர் அருகே உள்ள திருக்கண்ணமங்கை பகுதியில் உள்ள ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் ஆலயத்திற்கு சொந்தமான குடிமனைகளில் பல தலைமுறையாக குடியிருந்து வருவர்களுக்கு பட்டா வழங்க வேண்டியும்,

கோவில் மனைகளில் குடியிருந்து வருபவர்களுக்கு மின் இணைப்பு வழங்க ஏதுவாக தடையில்லா சான்று வழங்க மறுப்பதை கண்டித்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஒன்றிய செயலாளர் தனுஷ்கோடி தலைமையில் திருக்கண்ணமங்கை பகுதியில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக வந்து காவல்துறையின் தடுப்புகளை தள்ளிவிட்டு திருக்கணமங்கை ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் ஆலயத்தை சூழ்ந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது இந்து சமய அறநிலைய துறையின் செயலை கண்டித்தும் கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.

பேட்டி துரைராஜ் மாநில பொருளாளர்

Exit mobile version