லண்டன் : அகமதாபாத் ஏர் இந்தியா விபத்தின் சோகமும் அலறலும் இன்னும் அடங்காத நிலையில், அதே மாதிரியான ரகத்தில் உருவாக்கப்பட்ட மற்றொரு போயிங் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸின் Boeing 787-8 Dreamliner விமானம், ஞாயிற்றுக்கிழமை மாலை 5:10 மணியளவில் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில் 200க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
விமானம் ஓடுபாதை 27R-இல் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களுக்குள், சுமார் 9,000 அடி உயரத்தில், விமானத்தின் இடது இறக்கையில் உள்ள flaps பகுதியில் “adjustment failure” என்ற தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், விமானத்திற்கு தேவையான நிலைத்த உந்துதல் சீராக வழங்கப்படவில்லை.
தாமதிக்காமல் செயல்பட்ட விமானிகள், ஹீத்ரோ விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு கொண்டு அவசர தரையிறக்கம் கோரினர். விமானத்தில் இருந்த எரிபொருளை குறைத்த பிறகு, அவசர நிலை வழிகாட்டுதலின் கீழ், விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
பயணிகள் மற்றும் விமானக் குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது. இந்த கோளாறு எதனால் ஏற்பட்டது என்பதை தெளிவுபடுத்தும் வகையில் தற்போது தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, அகமதாபாத்தில் ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தும், flap adjustment failure காரணமாகத்தான் ஏற்பட்டதாக நிபுணர்கள் சந்தேகிப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், Boeing 787-8 ரக விமானங்களின் பாதுகாப்பு பற்றிய கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன.
நல்ல தீர்வாக, விமானிகள் நேர்மையாக செயல்பட்டு பெரிய விபத்தை தவிர்த்தனர் என்பது பெரும் நிம்மதியை அளிக்கிறது.