“சூரி போன்ற கதாநாயகன் தமிழ் சினிமாவிற்கு தேவை” – இயக்குநர் மாரி செல்வராஜ் உருக்கம்!

நகைச்சுவை நடிகராகத் திரையுலகில் அறிமுகமான சூரி, தற்போது மாஸ் கதாநாயகனாக மாறி வெற்றிப் பயணத்தில் இருக்கிறார். அவர் தற்போது, இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் மாமன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மே 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ், சூரியைப் பற்றி உருக்கமாகப் பேசினார்.

“சூரி போன்று ஒரு கதாநாயகன் தமிழ் சினிமாவிற்கு மிகவும் தேவை. வாழ்க்கையை எதார்த்தமாக வாழும் மனிதர்களும், எப்போது கதாநாயகர்களாக மாறுவார்கள் என்று பலமுறை யோசித்திருக்கிறேன். எனக்கும் சூரி அண்ணனுக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான இணைப்பு உள்ளது. இருவரும் ஒரே வீடில் இருந்து வந்தது போல் ஒரு நெருக்கம் உள்ளது.

யாருமே நடிக்க மாட்டேன் என்று கூறப்படும் கதையைக் கூட, சூரியிடம் எடுத்துச் சென்றால், அவர் அதில் நடிப்பார் என்ற நம்பிக்கை இப்போது பலருக்கும் உருவாகியுள்ளது,” என்று மாரி செல்வராஜ் தெரிவித்தார்.

Exit mobile version