பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று இந்தியா அரசு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் தன்னை பாகிஸ்தானுக்கு கடத்த வேண்டாம் என்று சீமா ஹைதர் என்ற பெண் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது
நான் பாகிஸ்தானின் மகளாக இருந்தேன். இப்போது நான் இந்தியாவின் மருமகள்.
நான் பாகிஸ்தானுக்குத் திரும்ப விரும்பவில்லை. எனவே, தயவுசெய்து என்னை இந்தியாவில் தங்க அனுமதிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சீமா சச்சினை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார் என்றும் அவர் கணவருடன் இந்தியாவில் இருக்க உரிமை உள்ளது என அவர்களின் வக்கீல் தெரிவித்தார்.