May 10, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நீதிமன்ற உத்தரவை மீறி பெருமாள் கோயில்பட்டியில் தீபம் ஏற்ற 144 தடை

by sowmiarajan
December 4, 2025
in News
A A
0
நீதிமன்ற உத்தரவை மீறி பெருமாள் கோயில்பட்டியில் தீபம் ஏற்ற 144 தடை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திண்டுக்கல் மாவட்டம் பெருமாள் கோவில்பட்டி கிராமத்தில் உள்ள மண்டு கருப்பணசுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தும், சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதற்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சிறுபான்மையினரின் வாக்கு வங்கிக்காக இந்துக்களின் உரிமையை ‘திராவிட மாடல்’ தி.மு.க. அரசு பறிக்கிறது என்றும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

திண்டுக்கல் மாவட்டம் பெருமாள் கோயில்பட்டி கிராமத்தில் இந்துக்கள் சிறுபான்மையாகவும், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாகவும் உள்ளனர். இங்குள்ள மண்டு கருப்பண்ண சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை தினத்தில் தீபம் ஏற்றுவதற்கு இந்துக்கள் சார்பில் முயற்சி நடைபெறுவது வழக்கம். ஆனால், அங்குள்ள கிறிஸ்தவர்களின் எதிர்ப்பைக் காரணம் காட்டி இதுவரை போலீசார் அனுமதி மறுத்து வந்துள்ளனர். இந்தச் சூழலில், இந்துக்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தீபம் ஏற்ற அனுமதி கோரி வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கோயில் இடத்தில் தீபம் ஏற்றுவதால் யாருக்கும் எந்த இடையூறும் இல்லை எனத் தெரிவித்து, தீபம் ஏற்ற அனுமதி வழங்கித் தீர்ப்பு வழங்கினார்.

ஆனால், இந்தச் சாதகமான தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல், சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறி மாவட்ட நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்தத் தவறியது குறித்து இந்து அமைப்புகள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆவேசமாகக் கண்டனம் தெரிவித்த இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், “இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் அனுதினமும் தங்களது வழிபாட்டு உரிமைகளைப் பாதுகாக்கப் போராடுவதும், நீதிமன்றம் சென்று நீதி பெறுவதும், பிறகு அந்த நீதி மறுக்கப்படுவதும் உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நடைபெறாத கொடுமை. இந்த கொடுமைகளைத் தமிழகத்தில் இந்துக்கள் ஒவ்வொரு நாளும் அனுபவித்து வருகிறார்கள். பெருமாள் கோயில்பட்டியில் இந்துக்கள் சிறுபான்மையானால், நீதிமன்ற அனுமதி இருந்தாலும்கூடத் தீபம் ஏற்றும் நிகழ்வை நடத்த முடியாது என்பது இதன் மூலம் கண்கூடாகத் தெரிகிறது,” என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில், “சிறுபான்மை மக்களின் ஓட்டுக்காக பெரும்பான்மை இந்து மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் நசுக்கும் திராவிட மாடல் தி.மு.க., அரசை, இனி வரும் காலங்களில் ஓட்டு என்ற ஆயுதம் கொண்டு ஓட ஓட விரட்ட வேண்டும்” என்று ஆவேசமாகக் கண்டனம் தெரிவித்தார். நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த 144 தடை உத்தரவு, அரசியல் ரீதியாகவும், சட்டம்-ஒழுங்கு ரீதியாகவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: court order violationlamp lighting bansection 144temple regulations
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திண்டுக்கல்லில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 280 பேருக்கு ரூ.93.67 லட்சம் நலத்திட்ட உதவி

Next Post

தென்காசி அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசுவாமி படுகொலை

Related Posts

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
News

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்
News

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்
News

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்
Bakthi

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026
Next Post
தென்காசி அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசுவாமி படுகொலை

தென்காசி அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசுவாமி படுகொலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

0
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

0
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

0
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

0
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026

Recent News

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.