மயிலாடுதுறை ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம். 1008 சங்குகளால் அபிஷேகம் செய்யப்பட்டதை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்:-
மயிலாடுதுறை ஸ்ரீ ஸ்ரீமாயூரநாதர் ஆலயத்தில் அபயாம்பிகை அம்மன் மயில் உருவில் சிவனை பூஜித்து மயில்உரு நீங்கி சாப விமோசனம் அடைந்ததாக புராண வரலாறு. இவ்வாலயத்தில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. புனிதநீர் அடங்கிய கடங்கள், 1008 சங்குகளில் புனிதநீர் ஊற்றி நடைபெற்ற சிறப்பு ஹோமத்தில் பட்டு வஸ்திரங்கள் போடப்பட்டு மகா பூரணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து பஞ்சமுக தீபாராதனை மகா தீபாராதனை செய்யப்பட்டது. பின்னர் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க கோவிலை சுற்றி எடுத்துவரப்பட்டு ஸ்ரீ மாயூரநாதருக்கு அபிஷேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து 1008 சங்குகளால் மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சங்காபிஷேகம் செய்யப்பட்டதை கண்டு தரிசனம் செய்தனர்
