November 19, 2025, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இந்தியாவிலேயே அதிக அளவில் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்த முதல்வர்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞரும்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே S.M.நாசர் பெருமிதம்

by Satheesa
November 15, 2025
in News
A A
0
இந்தியாவிலேயே அதிக அளவில் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்த முதல்வர்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞரும்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே S.M.நாசர் பெருமிதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தமிழ் நாடு கூட்டுறவு துறை சார்பில் 72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா திருவள்ளூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு 2124 பயனாளிகளுக்கு 23.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடனுதவிகள், விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள், டிராக்டர்கள், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம், பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு பரிசுகள், உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர் சா.மு.நாசர் கூட்டுறவு இயக்கம் இந்திய துணைக் கண்டத்தில் 1904ஆம் ஆண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் திரூர் கிராமத்தில் விவசாய சேவை கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் முதன்முதலாக துவக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 1911ஆம் ஆண்டில் நகர மக்களின் மேம்பாட்டிற்காக திருவள்ளூரில் நகர கூட்டுறவு வங்கி துவக்கப்பட்டது.20 ஆயிரத்து 430 பயனாளிகளுக்கு .100.09 கோடி மதிப்பீட்டில் நகைக்கடன்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தள்ளுபடி செய்தார். மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு கள நிறுவனங்களில் மகளிரின் துயர் துடைக்கும் வகையில் ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டு 1289 மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் 13703 பயனாளிகளுக்கு ரூ.30.91 கோடி அளவிற்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு துறை இந்தியாவில் சிறந்து விளங்கும் ஒரே மாநிலமாக திகழ காரணம் முத்தமிழ் அறிஞர் கலைஞரும்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தான் என்றார்.அதனால் தான் விவசாயிகளின் வாழ்க்கையில் அக்கரை கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.30.12 கோடி மதிப்பீட்டில் 195 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். மேலும், விவசாயிகள் குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்களை பயன்படுத்திட திருவள்ளூர் மாவட்டத்தில் 12 தாலுக்கா அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையத் திட்டம் மற்றும் 14 ஒன்றிய அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.கூட்டுறவு துறைக்கு உயிர் ஊட்டியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.அவர் 5 வது முறையாக முதல்வராக பதவி ஏற்றதும் முதல் கையெழுத்து கூடுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருந்த 7 ஆயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்தார். அதேபோல முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பதவியேற்றதும் 12 ஆயிரம் கோடி நகை கடன்களை தள்ளு படி செய்தார், 6 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்களை தள்ளுபடி செய்தார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செய்யாத கூட்டுறவு கடன் தள்ளுபடிகளை செய்த முதல்வர்கள் கலைஞரும், மு.க.ஸ்டாலின் ஆகிய இருவர் மட்டுமே என்றார். இந்த விழாவில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தபா.ஜெயஸ்ரீ, திருவள்ளுர் நகர்மன்ற தலைவர் பா.உதயமலர் பாண்டியன் உள்ளிட்ட துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags: district newsdmkmk stalintamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவள்ளூரில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிய சட்டமன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டு விரைந்து முடிக்க அறிவுரை

Next Post

தமிழக பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுபோட்டிகளில் வெற்றி கௌதமசிகாமணியிடம் வாழ்த்து

Related Posts

ஆழியார் மலைப்பகுதியில் அதிக பனிப்பொழிவு
News

ஆழியார் மலைப்பகுதியில் அதிக பனிப்பொழிவு

November 19, 2025
ஆழியார் தடுப்பணையில்  இரும்பு கம்பி வேலி அமைப்பு
News

ஆழியார் தடுப்பணையில்  இரும்பு கம்பி வேலி அமைப்பு

November 19, 2025
வீரபாண்டியில் நெல்பாவும் பணி பன்றிகளால் பாதிப்பு
News

வீரபாண்டியில் நெல்பாவும் பணி பன்றிகளால் பாதிப்பு

November 19, 2025
உடுமலை காந்தலூர் மலைவழிப் பாதை ‘ஆப்ரோடு’ நிலை
News

உடுமலை காந்தலூர் மலைவழிப் பாதை ‘ஆப்ரோடு’ நிலை

November 19, 2025
Next Post
தமிழக பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுபோட்டிகளில் வெற்றி கௌதமசிகாமணியிடம் வாழ்த்து

தமிழக பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுபோட்டிகளில் வெற்றி கௌதமசிகாமணியிடம் வாழ்த்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
டீ குடிக்க சாலையை கடக்கும்போது சரக்கு வாகனம் மோதி ஐயப்ப பக்தர்கள் பலி

டீ குடிக்க சாலையை கடக்கும்போது சரக்கு வாகனம் மோதி ஐயப்ப பக்தர்கள் பலி

November 19, 2025
கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு – தமிழக அரசு ஏமாற்றம்!

கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு – தமிழக அரசு ஏமாற்றம்!

November 18, 2025
தமிழகம் வரும் பிரதமரை வரவேற்க தயாரான பிஜேபியினர் – பாதுகாப்பு வளையத்தில் கோவை

தமிழகம் வரும் பிரதமரை வரவேற்க தயாரான பிஜேபியினர் – பாதுகாப்பு வளையத்தில் கோவை

November 19, 2025
திமுகவை உசுப்பேத்துகிறார் திருமா-EPS காட்டம்

ரவுடிகளின் ராஜ்யமாக மாறிய சென்னை – EPS கொந்தளிப்பு

November 18, 2025
ஆழியார் மலைப்பகுதியில் அதிக பனிப்பொழிவு

ஆழியார் மலைப்பகுதியில் அதிக பனிப்பொழிவு

0
ஆழியார் தடுப்பணையில்  இரும்பு கம்பி வேலி அமைப்பு

ஆழியார் தடுப்பணையில்  இரும்பு கம்பி வேலி அமைப்பு

0
வீரபாண்டியில் நெல்பாவும் பணி பன்றிகளால் பாதிப்பு

வீரபாண்டியில் நெல்பாவும் பணி பன்றிகளால் பாதிப்பு

0
உடுமலை காந்தலூர் மலைவழிப் பாதை ‘ஆப்ரோடு’ நிலை

உடுமலை காந்தலூர் மலைவழிப் பாதை ‘ஆப்ரோடு’ நிலை

0
ஆழியார் மலைப்பகுதியில் அதிக பனிப்பொழிவு

ஆழியார் மலைப்பகுதியில் அதிக பனிப்பொழிவு

November 19, 2025
ஆழியார் தடுப்பணையில்  இரும்பு கம்பி வேலி அமைப்பு

ஆழியார் தடுப்பணையில்  இரும்பு கம்பி வேலி அமைப்பு

November 19, 2025
வீரபாண்டியில் நெல்பாவும் பணி பன்றிகளால் பாதிப்பு

வீரபாண்டியில் நெல்பாவும் பணி பன்றிகளால் பாதிப்பு

November 19, 2025
உடுமலை காந்தலூர் மலைவழிப் பாதை ‘ஆப்ரோடு’ நிலை

உடுமலை காந்தலூர் மலைவழிப் பாதை ‘ஆப்ரோடு’ நிலை

November 19, 2025

Recent News

ஆழியார் மலைப்பகுதியில் அதிக பனிப்பொழிவு

ஆழியார் மலைப்பகுதியில் அதிக பனிப்பொழிவு

November 19, 2025
ஆழியார் தடுப்பணையில்  இரும்பு கம்பி வேலி அமைப்பு

ஆழியார் தடுப்பணையில்  இரும்பு கம்பி வேலி அமைப்பு

November 19, 2025
வீரபாண்டியில் நெல்பாவும் பணி பன்றிகளால் பாதிப்பு

வீரபாண்டியில் நெல்பாவும் பணி பன்றிகளால் பாதிப்பு

November 19, 2025
உடுமலை காந்தலூர் மலைவழிப் பாதை ‘ஆப்ரோடு’ நிலை

உடுமலை காந்தலூர் மலைவழிப் பாதை ‘ஆப்ரோடு’ நிலை

November 19, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.