சீர்காழி அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்டசீ ரூ 7 லட்சத்து 34 ஆயிரம் பறிமுதல்
சீர்காழி அருகே பழையாறு பகுதியில் சட்டபேரவை தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள நிலையான கண்காணிப்பு குழு -5 சேர்ந்த தினகர் (நகராட்சி மேலாளர்) மற்றும் குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக சென்ற தாண்டவன் குளம் பகுதி பாலமுருகன் (47) என்பவரது இருசக்கர வாகனத்தினை சோதனை செய்தபோது ரூ 7 லட்சத்து 34 ஆயிரத்து 200 ரொக்க பணம் இருந்தது . இவை பழையார், புதுப்பட்டிணம் தனியார் ஏ.டி.எம்-ல் இருப்பு வைத்திட கொண்டு செல்லப்பட்டதும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்டதும் தெரியவந்தது இதனையடுத்து ரூ. 7 லட்சத்து 34 ஆயிரத்து 200 ரொக்க பணத்தை பறிமுதல் செய்து,கருவூலத்தில் கட்டிட ஏதுவாக தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பாபு, தனி வட்டாட்சியர் சண்முகம், மண்டல துணை வட்டாட்சியர் ரகு ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது .

















