மயிலாடுதுறையில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான்; 4 பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தொடக்கி வைத்தார்:-
மயிலாடுதுறையில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை, அழகுஜோதி அகாடமி பள்ளியுடன் இணைந்து மாவட்ட போக்குவரத்து காவல்துறை நடத்திய சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. 12 வயதுமுதல் 18 வயது மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 7 கி.மீ. பெண்கள் 5 கி.மீ. என நான்கு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியானது ஆண்களுக்கு கால்டெக்ஸ் மற்றும் பெண்களுக்கு மணக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கியது. வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராம்குமார், அழகு ஜோதி அகாடமி பள்ளி தாளாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற மராத்தான் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடித்தவர்களுக்கு ரூ.5000, இரண்டாம் இடம் 3000 மூன்றாம் இடம் 2000 மற்றும் நான்கு முதல் பத்து இடங்களை பிடித்தவர்களுக்கு தலா ரூ 1000 மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கி வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதில் 650-க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

















