2025 ஐபிஎல் தொடரின் கடைசி கட்டத்தில் பிளேஆஃப் இடங்களை நோக்கி அணிகள் கடுமையாக போட்டியிடுகின்றன. அதில் முக்கியமானதாக கம்பீரமாக முன்னேறியிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இன்று பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த RCB அணி, முதலிரண்டு இடங்களுக்கான போட்டியில் பின்னடைவை சந்தித்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – அதிரடியான 231 ரன்கள் :
டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா (54) மற்றும் டிராவிஸ் ஹெட் (30) சக்திவாய்ந்த தொடக்கத்தை வழங்கினர். அடுத்தவையாக வந்த இஷான் கிஷன் (94, 7 பவுண்டரி, 5 சிக்சர்) மற்றும் ஹீன்ரிச் கிளாசன் (32) அட்டகாசமான ஆட்டத்தை வழங்கினர். அனிகேத் வெர்மாவும் 3 சிக்சர்களை பறக்கவிட்டு மெர்சலாக்கினார். இதனுடைய விளைவாக SRH அணி 231 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை பதிவு செய்தது.
RCB-க்கு துவக்கத்தில் நம்பிக்கை – ஆனால் இடைப்பட்ட மொச்சை :
பிலிப் சால்ட் (61) மற்றும் விராட் கோலி (43) இடையே சிறந்த தொடக்கம் இருந்தது. 10 ஓவரில் 120 ரன்கள் அடைந்தனர். ஆனால் மயங்க் அகர்வால் (11) மற்றும் நடுப்பகுதி பேட்ஸ்மேன்கள் தடுமாறியதால், தேவைப்பட்ட வேகத்தில் ரன்கள் குவிக்க முடியவில்லை.
ஜிதேஷ் சர்மா (28) மற்றும் ரஜத் பட்டிதார் சில அடிகள் கொடுத்தாலும், எஷான் மலிங்காவின் ஒரு அட்டகாச ஓவரில் இரண்டு முக்கிய விக்கெட்டுகள் சாய்ந்தன. பின்னர் வந்தவர்கள் அனைவரும் விரைவில் வெளியேறினர். RCB 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பிளேஆஃப் நிலவரம் – மும்பைக்கு வாய்ப்பு :
இந்த தோல்வியால் ஆர்சிபி அணி பாயிண்ட் டேபிளில் மூன்றாவது இடத்திற்கு சரிந்துள்ளது. ரன்ரேட்டும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குஜராத், பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு முன்னேற பெரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஹசல்வுட் இன்றி ஆர்சிபி பந்துவீச்சு பலவீனமானது :
ஆர்சிபி அணியின் பந்துவீச்சு யூனிட்டில் ஹசல்வுட் இல்லாதது பெரிய குறையாகவே தெரிகிறது. புவனேஷ்வர் குமாரும் டேத்த் ஓவர்களில் மிக்க தவறுகளை செய்ததால், SRH இமாலய ஸ்கோர் பதிவு செய்ய முடிந்தது. பிளேஆஃப் தொடங்கும் முன்னர் ஹசல்வுட் அணியில் சேருவார் என்றாலும், பந்து வீச்சு ஆழம் குறித்து ஆர்சிபி அணி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.