அரசியல் நாகரீகத்தை புதிதாக யாரும் கற்றுக் கொடுக்க தேவையில்லை – ஆர்.பி.உதயகுமார்

மதுரை தெப்பக்குளத்தில் உள்ள வண்டியூர் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் கூறுகையில் “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்ப்போம் எனும் எழுச்சி பயணத்தை எடப்பாடி பழனிச்சாமி நடத்தி வருகிறார், மதுரை மாவட்டத்தில் நான்காம் கட்டமாக செப்டம்பர் மாதம் எழுச்சி பயணம் நடைபெறவுள்ளது, மதுரை மாவட்டம் முழுதும் உள்ள மக்களை எழுச்சி பயணித்திற்கு வீடு, வீடாக சென்று அழைக்க உள்ளோம், எடப்பாடி பழனிச்சாமியின் சிரிப்பு தெய்வ சிரிப்பாக உள்ளது.

தூய்மை பணியாளர்கள் கைதில் திமுக அரசு அடக்குமுறையை கையாண்டுள்ளது, தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபடவில்லை தமிழகம் என்னவாகும், தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டது திமுக ஆட்சி சர்வாதிகார ஆட்சி என்பதை நிரூபிக்கிறது, எடப்பாடி பழனிச்சாமி எழுச்சி பயணம் வெற்றி பெற்றுள்ளதால் ஒ.பி.எஸ் அரசியல் கால் புணர்ச்சியோடு எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்கிறார், அதிமுக தொண்டர்கள் குறித்து கவலைப்படும் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து நிற்கும் பொழுது ஒ.பி.எஸ் ஒரு நிமிடம் யோசித்து இருந்தால் அதிமுகவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டுட்டு இருக்க மாட்டார்.

ஒபிஎஸ் அதிமுக தலைவர்கள் காட்டிய வழியில் செல்லவில்லை, தலைமை பண்புடன் செயல்படவில்லை, ஒபிஎஸ் எத்தனை முறை தடம் புரண்டு இருக்கிறார் என்பதை நினைத்து பார்க்க வேண்டும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் இடையில் தாய்க்கும் பிள்ளைக்கும் இருக்கும் தாய்ப்பாசம் போல உள்ளது, அத்தகைய தாய் பாசம் தனக்கு கிடைக்கவில்லை என்கிற போட்டி பொறாமையில் ஓபிஎஸ் பேசி வருகிறார்.

ஓபிஎஸ் முன்மொழிந்ததால் எடப்பாடி பழனிச்சாமி தேர்தலில் போட்டியிட்டார், எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்சை முன்மொழிந்ததால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போது ஓபிஎஸ் துணை முதலமைச்சராக பதவி வகித்தார், அப்போது எடப்பாடி பழனிச்சாமி ஆளுமை அவருக்கு தெரியாதா?, ஒ.பி.எஸின் கருத்துக்கள் அவருடைய இயலாமையை காட்டுகிறது, தடம் புரண்டு சென்ற ஓபிஎஸின் கருத்துக்களை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை.

ஓபிஎஸின் கருத்துக்கள் அனுதாபத்தை தேடும் விதமாகவும், பிரச்சனைகளை திசை திருப்பும் விதமாகவும் அமைந்திருக்கிறது, தடம்புரண்டு சென்ற ஒ.பி.எஸின் கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அதிமுக தலைவர்கள் காட்டிய வழியில் அதிமுகவின் வழிகாட்டிகள், நிர்வாகிகள், தொண்டர்கள் பயணிக்க வேண்டும் என்பது அடிமட்ட தொண்டனின் எதிர்பார்ப்பு, அதில் இருந்து விலகிய ஓபிஎஸ் அதற்கான நியாயங்களை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, அதிமுகவினருக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா கற்றுக்கொடுத்த அரசியல் நாகரீகத்தை புதிதாக யாரும் கற்றுக் கொடுக்க தேவையில்லை.

இபிஎஸ் – ஒபிஎஸ் இணைவார்களா என்ற கேள்விக்கு, எல்லாவற்றுக்கும் காலம் உள்ளது. காலம் பதில் தரும். வெயிட் அன் சி, எல்லாரும் அண்ணன்கள் தான். ஒபிஎஸ் என்றும் அண்ணன் தான், ஆனால், ஓபிஎஸ் அனுதாபம் தேடி திசை திருப்புகிற வேலை என்பது அவருக்கு தோல்வியாக தான் கிடைக்கும், தடம் புரண்டவர்கள் தடம் மாறியவர்களின் கருத்துக்களை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என்பது ஓபிஎஸ் நன்றாக தெரியும்” என கூறினார்.

Exit mobile version